கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை, வடக்கில் உள்ள ஒரு அருமையான இடம்.
எனவே, றீச்சாவில் கிடைக்கும் அனைத்து வகையான பொழுதுபோக்கான செயற்பாடுகளிலும் பங்குபற்றி, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தையும் முன்பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை இலகுவாக்க ஒரு செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.
இணையத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, இதன்மூலம் றீச்சாவின் அனைத்து விதமான தகவல்களையும் அறிந்து கொள்வதுடன் முன்பதிவுகளையும் செய்து கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
