கொட்டஹேன பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 41 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை 16வது வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சொகுசு காரில் வந்த குழு

காவல்துறை விசாரணைகளில், சொகுசு காரில் வந்த ஒரு குழு, சம்பந்தப்பட்ட நபரை துரத்திச் சென்று பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனையில் பரபரப்பு! ஒருவர் சுட்டுக் கொலை | Shooting Incident In Kotaheena

இதேவேளை, துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழனி ரெமோஷன் என்பவரின் குற்றக் கும்பல், புகுடு கண்ணா என்பவரின் குற்றக் குழுவை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments