கொழும்பு மாவட்டத்தில் நவகமுவ, கொரத்தொட்ட மெனிககரா சாலை பகுதியில் இன்று (2026.01.01) இரவு சுமார் 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பொலிஸார் தெரிவிப்பின்படி, துப்பாக்கிச் சூடு மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டது.
தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
