அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!டிட்வா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு (Rebuilding Sri Lanka Fund) லண்டன் வாழ் தொழிலதிபர் ஒருவர் பத்து மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.இவனின் உறனர்கள் யாராவது சுத்தத்தில் கொலை செய்யப்பட்டிருந்தால் இதைக் கொடுத்திருப்பானே,பொங்கி எழுந்த தமிழ் பெண்கள்,

இங்கிலாந்தில் இயங்கும் பிரபல வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் (Western Jewellers) நிறுவனத்தின் உரிமையாளரும் மற்றும் யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவனருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம் என்பவரே இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.

மறுசீரமைப்புப் பணி

இந்தநிலையில், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பத்து மில்லியன் ரூபாய்க்கான காசோலையை சிவசுந்தரம் நேற்று (11) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்! | Diaspora Businessman Donates Money To Lankan Govt

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments