நாட்டிலே இடம்பெற்ற இன அழிப்பிற்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என சுவிஸ் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாம் ஈழத்தமிழர்களாக இல்லாவிட்டாலும் இன அழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டிய உரிமை அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுவிஸினுடைய வெளிநாட்டு அமைச்சரை முள்ளிவாய்க்காலுக்கும், செம்மணி புதைகுழிக்கும் சென்று தமிழ் மக்களுக்கான இரங்கலைத் தெரிவிப்பதன் ஊடாக தமிழர்களை மதிப்பளிக்கலாம் என்ற தகவலை அவருக்கு மனுவின் ஊடாக தெரியப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments