பேர்ன் நகரசபை (Bern Gemeinde) பகுதியில் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஒற்றுமை, மரியாதை மற்றும் நீதி ஆகிய விழுமியங்களுடன் அரசியலில் ஈடுபடும் நபர், 29 மார்ச் 2026 வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு, பெயர் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இது, சுவிஸ் அரசியலில் தமிழ் சமூகத்தின் குரல் வலுவடைய முக்கியமாகும்.

மேலும், இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைப் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஏற்கவேண்டும் என்றும், அவர் வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
இது, சமூகத்தின் துன்பங்கள் புறக்கணிக்கப்படாமல், மதிப்பிடப்படுவதை உறுதிப்படுத்தும் வலுவான சமிக்ஞையாகும்.
அவர் மேலும் கூறியதாவது,
சமூகத்தின் பிரதிநிதித்துவம் வலுவானாலும், ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான் முக்கியம்.
பேர்ன் நகரசபை பகுதியில் உள்ள அனைத்து குடிமக்களும் 29 மார்ச் 2026 அன்று அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
