மாநில உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடகு வைத்துவிட்டார் என்றும், ஆயிரம், இரண்டாயிரம் எனப் பணம் கொடுப்பதும், பேருந்தில் இலவசம் எனச் சொல்வதும் மக்களை ஏமாற்றும் வேலை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் இடம்பெற்றிருந்தது.

அரசியல் கட்சி 

இதன்போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

அடிபட்ட புலியும் - இனமும் எழுந்து நிற்கிறது! சீமான் உரத்த பிரசாரம் | Stalin Who Pawned State Rights

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

5வது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் கதிராக்கும், பணத்துக்கும் பேரம் பேசாமல் தனித்து தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால் அது இந்திய துணைக்கண்டத்திலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

தனித்துவத்தோடு இருக்கிறோம். தனித்த உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம். மொழி அழிந்தால் நாடு அழியும். அரசியல் விடுதலைதான் தேவையே தவிர வியாபாரம் தேவையில்லை.

ரசிகர் கூட்டம் அல்ல

இது ரசிகர் கூட்டம் அல்ல, லட்சியக்கூட்டம். திரைக்கவர்ச்சியா? இன எழுச்சியா…? பணத்திற்காக நான் தேர்தலில் நிற்கவில்லை.

தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிரோம். களமிறங்கிய தேர்தல்களில் எல்லாம் தோல்வியடைந்தோம்.

அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்.

ரூ. 5 ஆயிரம் வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் ரூ. 2 லட்சம் கடன் இருக்கிறது என்பதை அறிவுச்சமூகம் அறிய வேண்டும்.

இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது” என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments