அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 பேரை ஈரான் புலனாய்வு அமைச்சு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை “உளவாளிகள், செயல்பாட்டு மற்றும் ஊடக கூலிப்படையினர்” என ஈரானிய அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்ந்த எதிரி சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உளவாளி
அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராக ஒரு வெளிநாட்டு நாட்டு குடிமகனும் உள்ளார்.

அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக இரண்டு வளைகுடா நாடுகளுக்காக உளவு சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபர் வடகிழக்கு பகுதியில் உள்ள கோரசன் ரசாவி மாகாணத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் இராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து அந்த வளைகுடா நாடுகளுக்கு அனுப்பியதாகவும், பின்னர் அவை தகவல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பகிர்ந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆயுதக் குழுவுடன் தொடர்பு
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு, ஈரானின் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் செயல்படும் ஆயுதக் குழுவுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைமைகள் மற்றும் நகர்வுகள் குறித்து தகவல்கள் சேகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை பிரிவும் 10 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அவர்கள் முக்கியமான இடங்களை காணொளி எடுத்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
