உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை, தற்போது உலகப்போருக்கான ஒரு முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலால் இந்த நீரிணையை மூடி உலகப் பொருளாதாரத்தையே முடக்கிவிடும் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு சிறிய தவறுகூட மிகப்பெரிய பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுக்கும் சூழல் உள்ளது.

எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்த நீரிணையைச் சார்ந்துள்ள நாடுகள், அங்கு அதிகரித்து வரும் இராணுவக் கட்டமைப்புகளைக் கண்டு பெரும் கவலையில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் இராணுவ நகர்வுகள் ஒரு சர்வதேசப் போர் அபாயத்தை நோக்கியே உலக நாடுகளைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன.

இது குறித்தும் அண்மைய சர்வதேச அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியல் ஆகியவற்றின் நிலவரம் குறித்தும் ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments