கம்பஹா பொலிஸ் பிரிவின் மாக்கவிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
அதற்கமைய, இந்தக் கொலை தொடர்பாக 76 வயது சந்தேக நபர் நேற்று பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
