எதிராக 25வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா..! நிர்வாகம் அதிரடி முடிவுபலர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்குவதற்காக 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வசந்தகால விடுமுறைக்காக வெளியூர் சென்றிருப்பதால், கேபிடல் ஹில் சில நாட்களாக மக்கள் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் நடப்பதால், அரசியல்வாதிகள் அலுவலக பணிகளில் இல்லாததால், இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி நிலவுகிறது. கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு “முழு நாகரிகத்தையும்” முடிவுக்குக் கொண்டுவருவதாக அச்சுறுத்தியபோது, இந்தக் கவலை உச்சத்தை தொட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி பதவி நீக்க கோரிக்கை

மேலும், ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர்காலங்களில் ஜனாதிபதியின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் முக்கியக் கட்டுப்பாடு, போர் அதிகாரச் சட்டம் (War Powers Act) மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தச் சட்டம், போர் தொடுக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

இந்த சட்டம் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டால், ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸின் ஒப்புதலைப் பெறும் வரை ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும்.

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது படையெடுத்ததாக ட்ரம்ப் அறிவித்ததும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டும் போர் அதிகாரத் தீர்மானங்கள் மீது வாக்களித்தன. ஆனால் இரண்டுமே தோல்வியடைந்தன.

இன்று, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் போர் அதிகாரங்கள் தொடர்பான மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம், போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பும் அமெரிக்கர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments