அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் செமிகண்டக்டர் (Semiconductor) துறையில் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த டன்ஹாவ் வாங் (Danhao Wang) என்பவர், கடந்த மார்ச் 19 ஆம் திகதி பல்கலைக்கழகக் கட்டடத்திலிருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினர் அவரிடம் “கடுமையான முறையில்” விசாரணை நடத்தியதாகச் சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது ஒரு தற்கொலை முயற்சியாக இருக்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் சந்தேகிக்கும் நிலையில், சீன வெளியுறவு அமைச்சு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு 

அமெரிக்க அதிகாரிகளின் இத்தகைய விசாரணை முறைகள் சீனக் குடிமக்களின் உரிமைகளை மீறுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சீர்குலைப்பதாகச் சீனா சாடியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மீதான கண்காணிப்பைக் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இராணுவத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆராய்ச்சியாளர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், வாங்-கின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ஜேன் வூ என்ற சீன-அமெரிக்க விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணம் அமெரிக்காவில் உள்ள சீன கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments