யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவுயாழில் தொடர்ச்சியாக தவறான முடிவெடுத்து உயிர்மாயக்க முயிற்சித்தவர், ஐந்தாவது தடவையாக சுருக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சென் செபஸ்டியார் வீதி, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரை மாயத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தவறான முடிவெடுக்கச் சென்ற நிலையில் காப்பற்றப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

நேற்றையதினம் வேலை முடிந்து வந்து சாப்பிட்டுவிட்டு இரவு எட்டு மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். இரவு 10.00 மணிவரை அவர் திரும்பி வராத காரணத்தால் அவரது சகோதரி அவரை தேடிச்சென்றுள்ளார்.

யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு | A Person Has Died Jaffna

இந்நிலையில், அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments