பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியபோதிலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சில சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதாக பாக்கிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் முஷாஹித் ஹுசைன் சையத் கூறியுள்ளார்.

இதில் இரண்டு சாதகமான அம்சங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒன்று, போர் நிறுத்தம் நீடிக்கிறது, இரண்டாவது, இரு தரப்பினரும் தங்களது அறிக்கைகளில் ஒரு வாய்ப்பைத் திறந்து வைத்துள்ளனர்.” என கூறியுள்ளார்.

ஈரானிய சகாக்கள்

இஸ்லாமாபாத்தில் இருந்தபோது, ​​அமெரிக்க அதிகாரிகளும் அவர்களது ஈரானிய சகாக்களும் ஓரளவு சுமுகமான சூழலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ஒரு முன்னேற்றத்தின் அறிகுறி என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதில் நிறைய சாதிக்கப்பட்டது, ஆனால் வெற்றியை உறுதிசெய்யும் தருணம் இன்னும் அமையவில்லை என ஹுசைன் சையத் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெதன்யாகுதான் உண்மையான போரைத் தூண்டுபவர் என்றும் ஏனெனில் அவர் தேவையற்ற முறையில் இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடருமாறு அமெரிக்காவைத் தூண்டி வருகிறார் எனவும் சையத் மேலும் கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments