துருக்கியில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 09 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். காயமடைந்தவர்களில் ஆறு பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் நடத்திய துப்பாக்கிசூடு

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் தற்கொலை செய்துகொண்டான்.

image credit -bbc

இதற்கிடையில், தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று முன்தினம் (14) அதே பள்ளியின் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர்.

18 வயதான துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அதே பள்ளியின் முன்னாள் மாணவன் என்று கூறப்படுகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments