இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்பினால் அவர்கள் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம் அல்லது எங்களை அழைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி இணைப்புகள்

அத்தோடு தொலைபேசி வசதி இருப்பது உங்களுக்குத் தெரியும், எங்களிடம் மிகச் சிறந்த பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும், அதில் அமெரிக்காவே வெற்றியாளராகத் திகழும் என்றும் ட்ரம்ப் இதன்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரத்தில் தற்போது தாம் கையாண்டு வரும் தரப்புகளில் சிலர் மிகவும் நிதானமானவர்களாக இருப்பதாகவும், மற்றவர்கள் அவ்வாறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்படும் என்று தான் நம்புவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் மூலமாகத் தனது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ள நிலையில் ட்ரம்பின் இந்த நேரடி அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments