புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த எங்களை புலிகளாக மாற்றியவர் அவருடைய பாடல்கள் தான். அவருடைய பெயர் தேனிசை செல்லப்பா என்றாலும், அவர் எழுச்சியின் குரலாகவே பார்க்கப்படுகிறார் என சீமான் தெரிவித்துள்ளார்.
தேனிசை செல்லப்பாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவருடைய பாடல்கள் இருக்கும் வரை தமிழ் சமூகத்தினரின் மத்தியில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவருடைய புகழை வருங்காலத்தினருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும் எமக்குள்ளது.
ஈழத்தமிழர்களின் வலியை தனது குரலால் வெளிப்படுத்தியவராகவே அவர் எம்முன் திகழ்கிறார் என தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
