தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.

வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் மக்கள் உறவுகள் மூலம் இலங்கையும் தமிழகமும் பிணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையும் இந்தியாவும் மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வருவதால், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.

வலுவான இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள், பெரும் செழிப்பையும் முன்னேற்றத்தையும் நோக்கி இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இலங்கை மக்கள் என்னுடன் இணைந்து எல்லா வெற்றிகளையும் வாழ்த்துகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments