உக்ரைன் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தையுடன் வர்த்தக உறவுகளை இணைப்பதைத் தவிர்த்தால், அமெரிக்காவுடன் இணைந்து பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று(13.5.2026) தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்திலிருந்து வர்த்தகத் தொடர்புகளைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முன்வந்தால், இரு நாட்டு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க வழிவகை ஏற்படும் என டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஆர்க்டிக் பகுதியில் உள்ள கனிம வளங்களை இரு நாடுகளும் இணைந்து அகழ்ந்தெடுப்பது மற்றும் பெரிங் நீரிணைக்கு அடியில் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட ரயில் சுரங்கப்பாதையை அமைப்பது போன்ற திட்டங்களை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

போர் நிறுத்தம்

இருப்பினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிபந்தனைகளில் ரஷ்யா இப்போதும் பிடிவாதமாக உள்ளது.

உக்ரைன் விவகாரத்தைத் தவிர்த்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யத் தயார்: ரஷ்யா அறிவிப்பு | Ready To Trade Us If Ukraine Issue Avoided Russia

உக்ரைன் தனது வசம் வைத்துள்ள நான்கு முக்கியப் பிராந்தியங்களிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என ஜனாதிபதி புடின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த நிபந்தனைகளை அபத்தமானது என நிராகரித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, தனது நாட்டின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

வர்த்தக உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை முடிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதிலும், தற்போது வரை அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

உக்ரைன் விவகாரத்தைத் தவிர்த்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யத் தயார்: ரஷ்யா அறிவிப்பு | Ready To Trade Us If Ukraine Issue Avoided Russia

தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் மலருமா என்பது உக்ரைன் விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவிலேயே தங்கியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments