முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்உப தவிசாளர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உப்பு கஞ்சி
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.




