திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து பயணித்த கப் (Cab) ரக வாகனமும், கந்தளாய் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர் என தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் ஹிங்குராக்கொட பகுதியிலிருந்து பந்தயக் குதிரை விபரங்கள் அடங்கிய நாளிதழ்களை (Race Paper) விநியோகிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.