ஈரானின் தென்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தற்காப்பு என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு விவரித்ததைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீவிரமடைந்து வரும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலுடன், அமெரிக்கா தற்காப்புத் தாக்குதல்கள் என்று அழைத்தவற்றை நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறிவிட்டதாக ஈரான் இதன்போது குற்றம் சாட்டியது.

அமெரிக்க ஆட்சியே பொறுப்பு

இந்த விரோதச் செயல்களால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்க ஆட்சியே பொறுப்பு என்று ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை! சீர்குலைந்த இராஜதந்திர முயற்சிகள் | Us Launched New Attacks On Iran Retaliatory Attack

எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்றும், ஈரான் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தயங்காது என்றும் எச்சரிக்கையம் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் எச்சரித்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்போது பதற்றம் நீடித்துள்ளதுடன்  இது பலவீனமான ராஜதந்திர முயற்சிகளைப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments