போா்க் கப்பல் மூலம் அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சோதனைகளை விரைந்து முடித்து, அடுத்த 2 மாதங்களுக்குள் காங் கோன் என்ற குறித்த புதிய போர்க்கப்பலை கடற்படையில் சோ்க்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

போா்க் கப்பல்கள் கட்ட உத்தரவு

முன்னதாக, கடந்த மாதம் மற்றொரு 5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ என்ற கப்பலை வடகொரியா தனது கடற்படையில் சோ்த்திருந்தது.

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்தள்ள உத்தரவு | North Korea Successfully Tests Advanced Missile

Image Credit: Defence Security Asia

Advertisement

இந்த நிலையில், 5,000 டன் எடை கொண்ட காங் கோன் போர்க்கப்பலையும் வடகொரியா தனது கடற்படையில் சேர்க்க சோதனைகளை நடத்தி வருகிறது.

இதேவேளை, எதிர்வரும் 5 ஆண்டுகளில் மூன்று போா்க் கப்பல்களைக் கட்ட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments