ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த, இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமெரிக்கா அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சபஹார் துறைமுக நகரில் உள்ள சபஹார் ஷஹீத் கலந்தாரி துறைமுக கண்காணிப்பு கோபுரம் அழிக்கப்பட்டதன் மூலம், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களைக் கண்காணித்து இலக்குவைப்பதற்கும், பொதுமக்களின் கப்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) திறன் பலவீனமடையும் என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இந்தத் தாக்குதலானது, ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை (US naval blockade) மீற முயற்சிக்கும் கப்பல்களைத் தவிர, பிராந்திய கடற்பரப்பில் உள்ள மற்ற அனைத்துக் கப்பல்களின் தடையற்ற கப்பற்போக்குவரத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்துவரும் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலேயே இந்த உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments