பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை படைத் தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தைக் குறிவைத்துத் தற்கொலைப்படை உறுப்பினர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தீவிரத் தேடுதல் வேட்டை

வெடிவிபத்தின் வீரியத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன. ஆஃப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தானில் பயங்கர உயிர்மாய்ப்பு படை தாக்குதல்: 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி | Deadly Attack Pakistan 15 People

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு அல்லது அதன் ஆதரவுப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, எல்லைப் பகுதிகளில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைத் தேடும் நோக்கில் தீவிரத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments