தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து இன்று (04) இரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments