யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதம்

இது குறித்து மேலும் தெரியவருகையில், தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.

சிம் கார்ட்டிற்காக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் - தாயார் கூறியது இதுதான்..! | 24 Year Old Youth Dies In Jaffna

அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.     

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments