உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக மிச்சிகன் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments