அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதன் பின்னணியில் அராக்சியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
புதிய முயற்சியும் தோல்வி
காணொளியொன்றில் பேசிய அராக்சி, அமெரிக்கத் தலைவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி பழைய திட்டங்களையே மீண்டும் கொண்டு வருவது அவர்களின் விரக்தியையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
