புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம்

புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களிடம் தமிழர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள பல இரகசிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருவதாக கனடா (Canada) அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவில் உள்ள புலனாய்வாளர்களின் அறிக்கைகளை மையமாகக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழரை நகர்த்தும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகள் இந்தியாவினை கடந்து இலங்கையில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்வதினை இந்தியா விரும்பாது. எனவே ஈழத்தமிழர்களை வைத்து புலம்பெயர்ந்தோரை தடுக்கும் நடவடிக்கையை இந்தியா இரகசியமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.” என்றார்.

தமிழ் மக்களின் பலமாகவும் விடுதலைபுலிகளின் அடையாளமாகவும் இருக்கும் புலம் பெயர்ந்திருக்கும் டயஸ்போராக்கள் மிகவும் வலிமையான சக்தி.

எனினும்,சமகாலத்தில் புலம் பெயர்ந்திருக்கும் டயஸ்போராக்கள் பலமிழந்து சுக்குநூறாகி விட்டார்கள்.

என்பவை தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments