கம்பஹா மாவட்டம் – நுங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-11-2024) இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Hit Pedestrian On The Road Died Gampaha

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும், பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Hit Pedestrian On The Road Died Gampaha

விபத்தில் உயிரிழந்தவர் மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளின் செலுத்திய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுங்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments