உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரித்தானிய பிரஜை தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா முன்னிலையாகியிருந்தார்.
இதையடுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தை அடுத்து கொழும்பு நீதிமன்றால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான தமிழர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பில் தவராசா தெரிவித்த மேலதிக விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,