இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

திருமண நிச்சயதார்த்தத்தின் போது தாய் வீட்டை சீதனமாக வழங்குவதாக மாமனார் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன்னர் வாக்குறுதி அளித்த மாமனார் இறந்ததையடுத்து, அவர்களுடன் வாழ்ந்த மாமியார், வீட்டை மருமகனுக்கு எழுதிவைக்காத கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

எஹலியகொட, புலகாபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியையான கேஷானி சந்திம ஜயலத், மருமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை இடம்பெற்று 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இங்கிரிய பகுதியில் மருமகன் உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவத்தில் 49 வயதான் சந்திமால் கெதுங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

சந்தேக நபர் கடந்த 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது மாமியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபரின் சடலம் கடந்த 28ஆம் திகதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments