பாகம் மூன்றின் ஆறாவதுதொடர்
வரலாற்றுச் சிறப்புமிக்க தேசியத் தலைவரின் சுதுமலை பிரகடனம்…..
********************************************************************04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழத் தேசியத்தலைவர் முதல் முதலாக மக்கள் முன்தோன்றி யாழ்பாணம் சுதுமலை அம்மன் கோயிலடியில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று கூடலில் இந்தியாவின் திட்டத்தை தலைவர் தெளிவுபடுத்தினார்.
இதன் அறிவிப்பாளராக லெப் கேணல் திலீபன் காடமையாற்றினார் முதலாவது உரையை யாழ் மற்றும் மட்டு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் லெப் கேணல் குமரப்பா அவர்கள் கூறினார்,

தலைவர் அவர்களுக்கும் இங்கே கூடியிருக்கும் மூத்த போராளிகளுக்கும் சகல பொது மக்களிற்கும் எனது இனிமையான வணக்கங்கள்,
முதல் கட்டமாக அதாவது இறுதியாக நடந்த இந்தப் போராட்ட சூழ்நிலையில் எமது தலைவர் டெல்லியில் இருந்தபோது, அவரை இங்கே கொண்டு வருவதற்கு மக்கள் செய்த அமைதி வழியான போராட்டங்கள் அதற்கு நாம் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்,
அதே நேரத்தில் எமது போராட்டப் பாதையில் ஏற்பட்ட இந்த நிகழ்சிப்போக்கை எமக்கு ராஜதந்திரமாகப் பயன்படுத்தி, மேலும் எமது பாதையில் சென்று எமது இலக்சியத்தை வென்று எடுப்போம் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாகவே இருக்கின்றோம், யாரும் கூறுவது போல எமது தலைவரோ அல்லது எமது சக அங்கத்தவர்களோ பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல அதாவது தற்போதைய சூழ்நிலையில் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எமது இலக்சியப்பாதையில் மேலும் அதைச் சென்றடைவோம் என்பதையும் அதில் மக்கள் எங்களைப் பூரணமாக நம்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோல் என சொல்லி வணக்கத்துடன் நிறைவு செய்தார்,,

இரண்டாவதாக திருமலை மாவட்டத் தளபதி புலேந்தி அம்மான் அவர்கள் உரையாற்றுகையில்
இங்கே வருகை தந்து இருக்கும் தலைவர் அவர்கட்கும் அனைத்து மூத்த உறுப்பினர்களிற்கும் எமக்கு ஆதரவு வழங்கிவரும் பொது மக்களிற்கும், வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய நிலை தமிழீழப் போராட்ட வரலாற்றிலே ஒரு இறுக்கமான காலகட்டமாகும், இந்த நிலையில் எமது கடந்தகால வலாற்றைக்கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம், திருகோணமலையைப்பொறுத்தவரை காலம்காலமாக மக்கள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் 1958 ஆம் ஆண்டு இருந்து இன்றுவரை அவர்கள்தாக்கப்பட்டுக் கொண்டயிருக்கின்றார்கள்
இன்றுஅமைதி நிலை காணப்பட்டாலும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பதை பொறுத்துயிருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்த நிலையில் இலங்கைக்கும் இந்திய விற்கும் இடையில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் நாங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கை விடுவதாகவோ அல்லது நாக்கள் பலயீனம் அடைந்து விட்டோம் என்பதோ இல்லை, என கூறி தனது உரையை நிறைவு செய்தார்,
இறுதியாகத்தலைவர் அவர்கள் உரையாற்றுகையில்

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிமீழ மக்களே
தங்களின் அதிகாரத்தையும், ஆயுத பலத்தையும் வைத்து பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்து விட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முதலில் அவர்கள் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் நாங்கள் இந்தியாவின் தடுப்புக் காவலில் இருந்தோம். அக்காலப்பகுதியில் தாங்கள் வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்ற வேண்டும் என்று இந்தியா எம்மை விரட்டியது. இது பற்றி எமது மக்களிற்கு தலைவர் தெளிவு படுத்தினார்.
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே …!இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல எமது சக்திக்கு அப்பாற் பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்துதிருந்து பார்க்கவேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக எமது மக்களையோ! எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ! கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டு வருகின்றது. என்பதை நீங்கள் அறிவீர்கள் நான் டெல்லி செல்லும் வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்குத் தெரியாது,
பாரதப்பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள், அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமக்கு எமது மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுமா? என்பதைப்பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.
ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம். ஏற்றுக்கொள்ள முடியாது, என்பதை இந்தியா அரசுக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கினோம் . ஆனால் நாம் ஏன்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் . என இந்தியா அரசு கங்கணம் கட்டி நிக்கின்றது.
இந்தியா அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை இது பிரதானமாக இந்திய இலங்கை உறவு பற்றியது. இந்தியா வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும். இது வழிவகுக்கின்றது.
ஆகவேதான் இந்தியா அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால் அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான் எமது மக்களைக் கலந்தாலோசிக்காமல் எமது கருத்துக்களைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.
எமது அரசியில் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் போது நாம் என்ன செய்வது. இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போரட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது.
பதினைந்து வருடங்களாக இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து ,சாதனை ஈட்டி எத்தனையோ உயிர்பலிகொடுத்துக் கட்டி எழுப்பப் ட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவது என்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுத பாணியாக்குகிறது. ஆகவே நாம் ஆயுதங்களைக் ஒப்படைக்க மறுத்தோம். அந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சனைகளை மனந்திறந்து பேசினேன்.
சிங்கள இனவாத அரசின் மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் இங்கே வருகை தந்து இருக்கும் தலைவர் அவர்கட்கும் அனைத்து மூத்த உறுப்பினர்களிற்கும் எமக்கு ஆதரவு வழங்கி வரும் பொது மக்களிற்கும், வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய நிலை தமிழீழப் போராட்ட வரலாற்றிலே ஒரு இறுக்கமான காலகட்டமாகும், இந்த நிலையில் எமது கடந்தகால வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம், திருகோணமலையைப் பொறுத்தவரை காலம்காலமாக மக்கள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் 1958 ஆம் ஆண்டு இருந்து இன்றுவரை அவர்கள்தாக்கப்பட்டுக் கொண்டயிருக்கின்றார்கள்,
இன்று அமைதி நிலை காணப்பட்டாலும் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்த நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் நாங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கை விடுவதாகவோ அல்லது நாக்கள் பலயீனம் அடைந்து விட்டோம் என்பதோ இல்லை, என கூறி தனது உரையை நிறைவு செய்தார், என்பதையும்; இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சனை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம். நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பெரிய தியாகங்களைப் புரிந்தோம், என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத்தேவையில்லை. எமது இலட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக உங்களது விடுதலைக்காக உங்களது விடிவிற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியா அரசிடம் ஒப்படைக்கின்றோம்.
நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம். ஈழத்தமிழரின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்தியா அரசு எம்மிடம் பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.
ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை இந்தியாவை நாம் நேசிக்கின்றோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதில் இருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனுடையே உயிரிக்கும் பாதுகாப்பிற்கும் இந்தியா அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தையை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
தமிழீழ இலட்சியத்துக்காவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களிற்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசியல் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப்போவதுல்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.என ஒரு இலட்சம் தமிழீழ மக்கள் முன்னிலையில் தலைவர் பேசி முடித்தார்.
அடுத்து,…….இந்தப்?பிரகடனத்தின் போது இந்தியாவினுடைய றோ விடுதலைப் புலிகளின் ஆழுமைமிக்க தலைவர்கள் யார் என்பதை அறிந்து விட்டார்கள், அதாவது மக்கள் மத்தியில் கருத்து விதைக்கக்கூடிய ஆதிகாரம் உள்ளவர்களாகவும் விடுதலைப்புலிப் போராளிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வீற்ரோ அதிகாரம் உள்ளவர்கள் இந்த மூன்று தலைவர்களும்தான் இந்த மூவரையும் அழித்து விட்டால் இவர்களால் எதுகும் செய்ய முடியாது அதானால்தான் குமரப்பா புலேந்தி இருவரும் இந்தியாவால் இலக்கு வைக்கப்பட்டார்கள் 2009 இறுதி அந்த மூன்று மனிதர்களில் ஒருத்தரான தலைவர் இலக்கு வைக்கப்பட்டார் அத்துடன் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது.
05/08/1987 அன்று ஆயுதங்களை ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம்.

ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில், புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.அதனால் தமது உயிரிலும் மேலாக புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள். ஆயுத ஒப்படைப்பு தினம், 1987ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.பாலாலி விமானப்படைத்தளத்தில் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆயுத ஒப்படைப்பு மிகவும் சுமூகமாக ஆரம்பமானது.
சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க, சிறிலங்கா இராணுவத்தின் வடபிராந்திய தளபதி பிரிகேடியர் ஜெரி.டி.சில்வா போன்றோர் அங்கு வந்திருந்தார்கள்.அவர்களுடன் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள். இந்திய அமைதிகாக்கும் படைகள் சார்பாக, ஜெனரல் திபீந்தர் சிங் (OFC, IPKF), மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் (GOC, 54 Division, IPKF), பிரிகேடியர் பெர்ணான்டஸ் (Pacification Specialist, IPKF) உட்பட மேலும் பல இராணுவ உயரதிகாரிகளும் சமூகம் அளித்திருந்தார்கள்.புலிகளின் ஆயுத ஒப்படைப்பை தமது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாற்றிவிடும் ஆர்வத்திலும், வேகத்திலும், உள்ளுர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு திரண்டிருந்தார்கள்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினம்
விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்பட இருந்த ஆயுதங்களை ஏற்றியபடி புலிகளின் பிக்கப் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி வந்தன.தமிழீழ இலக்கத் தகடுகளுடனும், புலிக் கொடிகளைப் பறக்கவிட்டபடியும், புலிகளது வாகனங்கள் அணிவகுத்து வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டது.விடுதலைப் புலிகளின் சார்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி, ஆயுத கையளிப்பின் அடையாளமாக, ஒரு கைத்துப்பாக்கியை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.அதனைத் தொடர்ந்து, தமது பிக்கப் வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.ஆயுத ஒப்படைப்பைத் தொடர்ந்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, சிறிலங்கா சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான, சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அறிவித்தலை பகிரங்கமாக வெளியிட்டார்.சேபால ஆட்டிக்கல கூறும்போது, “சிறிலங்காவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும்.இரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை போன்றனவற்றால் எமது ஜனநாயக சமுகம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வந்ததை, இந்த ஆயுத ஒப்படைப்பு இன்று முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.இன்றைய தினத்தில் இருந்து, இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த நாட்டில் சமாதானமாகவும், நல்லிணக்கத்துடனும் வாழுவோம் என்று நான் உண்மையாகவே எண்ணுகின்றேன் என்று குறிப்பிட்டார்.
சுவாரஸ்யமான நிகழ்வுகள்
மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்த இந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வுகளின் போது, ஒருசில சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.புலிகள் சார்பாக முதன் முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த யோகி, மிகவும் கவலை அடைந்த மன நிலையுடன், ஏனோதானோ என்று நடந்துகொண்டார்.மிகவும் வேகமாக அவர் தனது கைத்துப்பாக்கியை சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்து விட்டதால், அவர் ஆயுதத்தை ஒப்படைக்கும் காட்சியை தமது கெமராக்களில் படம் பிடித்துக்கொள்ளுவதற்கு, புகைப்படப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் தவறிவிட்டார்கள்.

எனவே, மீண்டும் ஒரு தடவை ஆயுத கையளிப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் யோகியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் யோகியோ அதற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார்.மறுபடியும் அடையாள ஆயுதக் கையளிப்புக் காட்சியை நடாத்துவதற்கு சேபால ஆட்டிக்கல தயாராக இருந்த போதிலும், யோகி அதற்கு உடன்பட உறுதியாக மறுத்துவிட்டார்.இதனால், ஆயுதக் கையளிப்பை பதிவு செய்வதற்கு படப்பிடிப்பாளர்களால் முடியவில்லை. யோகியால் கையளிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அங்கிருந்த மேசை ஒன்றின் மீது வைக்கப்பட, அதன் மீது சேபால ஆட்டிக்கல தனது கை வைத்தபடி புகைப்படங்களுக்கு காட்சி தந்தார்.இந்தப் படங்களே பின்னர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி இருந்தன. புலிகளின் ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக, யோகியால் ஒப்படைக்கபட்டிருந்த கைத்துப்பாக்கியை, சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆரிடம் கையளிக்க வேண்டும் என்று கூறிய சேபால ஆட்டிக்கல, அதனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.ஆயுத ஒப்படைப்பு நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு என்று கூறி, ஒரு தொகுதி இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா தனது விமானங்களின் முலம் யாழ்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தது.

ஆயுதக் கையளிப்பு
கடவுச் சீட்டுக்களோ, விசாக்களோ, சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியோ கூட இல்லாமல், இவ்வாறு அழைத்துவரப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஆயுதக் கையளிப்பு நடைபெற்ற கட்டிடத்தில் முன்னுரிமை கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள். இலங்கை ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கையில், இந்தியாவின் தூர்தர்ஷன் உட்பட, இந்தியாவில் இருந்து விஷேட விமானத்தில் வந்த ஊடகவியலாளர்களுக்கு, நிகழ்வுகளை பதிவுசெய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு விஷேட விமானத்தில் பலாலியில் வந்திறங்கியிருந்த ஊடகவியலாளர்கள், பலாலி விமானத்தளத்தின் அனைத்து இராணுவ நிலைகளையும் பார்வையிடவும், வீடியோ படம் பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள்.
அது, சிறிலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகளின் முனுமுனுப்புக்கு இலக்கானது. ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், இந்திய றோ உளவாளிகளும் அங்கு வந்துள்ளதாக, சிறிலங்காவின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தார்கள்.இந்திய அதிகாரிகள், புலிகளுடனும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடனும், ஊடகவியலாளர்களுடனும் புலிகளது ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் போது, Surrender (சரணாகதி) என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவிக்காது தவிர்த்துக் கொண்டார்கள்.
ஆயுதக் கையளிப்பு, ‘ஆயுத ஒப்படைப்பு (Arms Handing over) என்றுதான் குறிப்பிட்டார்கள்.புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.
08/08/ 1987 அன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து தலைவரால் அழைக்கப்பட்ட பிராந்தியா தளதிகள் மற்றும் மூத்த போராளி காந்தன் உட்பட 4 பேரையும் அதே இந்திய உலங்கு வானூர்தியில் தளபதி லெப். கேணல் குமரப்பா அவர்கள் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பில் விட்டார்.
ஆனால் இது நடந்து முடிந்து அவர்கள் எமது மக்களிற்காக எவ்விதமான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் பற்றியும் சிக்கள அரசாங்கத்தோடு பேசவில்லை. ஆனால் புத்திசாலித்தனமாக அவர்கள் வந்த கையோடு நாம் எமது கடினமான உழைப்பினால் வேண்டி வைத்து இருந்த ஆயுதங்களைக் களைவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். நாம் பல முறை அது சிங்கள வெறியர்களிடம் இருந்து மக்களை பாதுகாற்பதற்காக வைத்து இருக்கின்றோம் என சொன்ன போதிலும் அவர்கள் அதை ஏற்கவில்லை,
அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைவேண்டி விட்டார்கள். உதிரத்தைக் கொடுத்து வேண்டிய உயிரைக் கொடுத்து பாதுகாத்த ஆயுதம் இல்லை. இரண்டையும் இழந்த நிலையில் எமது தலைமை தவித்துக்கொண்டு இருந்தது, அதேவேளை வரதராஜப்பெருமாள் தலைமையில் எமது அமைப்பிற்கு எதிராகச் செயல்பட்ட மாற்று இயக்கங்களை இணைத்து இந்தியா அதிபர் ராஜீவ் காந்தியின் திட்டத்தின்படி வரதராஜப்பெருமாளின் தலைமையில் வடகிழக்கு தமிழ் இராணுவம் என்ற பேரில் ஒரு கட்டமைபு உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பெயர் “த்றீ ஸ்ரார் ” ஒட்டுக் குழு என்று எமது மக்கள் பிற்காலத்தில் இவர்களை அழைத்தார்கள்,.
எனவே நாம் அப்பொழுது 1987 / 9ம் மாதம் வரை நிராயுத பாணிகளாக இருந்தோம். அதைவிட எமது எதிர்காலச் சந்ததியினருக்குத் தேவையான கல்வி அறிவு தொடர்வான விடயங்களிலும் அவர்கள் கைவைத்தார்கள். அதன் தொடர் நடவடிக்கையாக வட கிழக்கில் இருந்த அனைத்துப் பாடசாலைகளும் இந்தியா இராணுவத்தின் படை முகாமாக மாற்றப்பட்டது, இதனால் மாணவர்களிற்கு படிப்பு இல்லாமல் போனது,அதை விட தங்களிற்கு சார்பான தமிழ் இயக்கங்களை இணைத்து வரதராஜப்பெருமாளின் தலைமையில் வட கிழக்கு இராணும் என ஒரு கட்டமைப்பை உருவாக்கியது, இந்திய இராணுவம் அதில் தமிழ் மக்களின் ஏகபிரநிகளும் மக்களிற்காக ஆயுதம் தூக்கிப்போராடி பல உயிர்களை அர்பணித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தால், அதை விட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு தலையாட்டிகளை வைத்து இனங் காணப்பட்டு அவர்களை நயவஞ்சகமாகக் கொலை செய்வதற்கான திட்டம் அரங்கேறியது. இவர்களின் கபட நாடகத்தை புரிந்துகொண்ட நாம் அகிம்சை வழியில் சென்று போராடினால் இவர்கள் தீர்வு தருவார்கள் என நாம் நம்பினோம்.

அடுத்து திலீபன் அவர்களின் உண்ணாவிரதம் பற்றிப்பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி