தமிழர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ,காந்திநகரைச் சேர்ந்த 36 வயதுடைய, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது

பணிக்கு சென்ற உத்தியோகத்தர் வீடு திரும்பாததன் காரணமாக , மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.