காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு! | Family Woman Died After Suddenly Fainting Jaffna

குறித்த பெண் இன்று (19) காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகிய போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments