பாகம் மூன்றின் பத்தாவது தொடர்
என்ன இறுக்கமான சண்டை நடந்தாலும் டிசம்பர் 25 வந்தால் நந்தார் பாப்பா நடனத்தை விடுதலைப்புலிகள் மறந்ததே கிடையாது,
போராளிகளை என்னேரமும் மகிழ்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் பெண் தளபதிகளில் ஒருதரான சோதியா முன்மாதிரியாகச் செயல்படுபவர், டிசம்பர் 25 வந்தால் பெண் போராளிகளை வெளிக்கிடுத்தி நடனம் ஆடிக்கொண்டு ஆண்போராளிகளின் முகாமிற்கு வந்துவிடுவார்கள் பெண் போராளிகள் நத்தார் பாப்பா வேடமிட்டு ஆடி வந்தவர் பெண் போராளி றோசீ என்பவர் ஆனால் தலைவரும் மற்றும் தளபதிகளும் அவர்களை ஊக்கப்படுத்தி அன்று இரவு ஒரு பெரிய கலைநிகழ்வு நடைபெறும், அனைவரையும் கூப்பிட்டு ஆடிப்பாடி அணைவரையும் மகிழ்சியாகவைத்துயிருப்பதே அதன் திட்டமாகவிருந்தது, பாடல்கள், ஆடல்கள் தீன் பண்டங்கள் என அனைத்துப்போராளிகளும் கலகலப்பாகக் காணப்படுவார்கள்,
புலிகள் என்றுமே மதவேறுபாட்டையோ அல்லது சாதி விடயமாகவோ பார்ப்பது கிடையாது, அனைத்து ஒரு தாய் பிள்ளைகளாகவே பார்கப்படுவார்கள்,
பின்னர் அங்கே நடந்த சண்டைகளைப்பற்றி போராளி காசன் குறிப்பிடுகின்றார்,
தொடந்து காயப்பட்டுப் போராளிகள் வெளியேறிக் கொண்டுயிருந்தார்கள்அதனால் எமக்கு ஆளணி இல்லாத பிரச்சனையிருந்தமைமையால் சிறு சிறு குழுவாகப் பிரிந்து அனைத்துக் காடுகளிலும் தாக்குதலிற்குத் தாயார் ஆக விடப்பட்டிருந்தோம். எதிர்த்து நின்று சண்டையிடுவதால் காயம் விரச்சாவு என ஆளணி குறைந்து கொண்டிருந்தமையால் நாலாவது வல்லரசான இந்திய இராணுவத்தோடு சண்டையிட்டு எப்படி எமது இயக்கத்தைப் பாதுகாப்பது என தலைவர் இரவு பகலாகச் சிந்தித்துக்கொண்டருந்தார்.?
அவரின் திட்டத்திற்கு அமைய திடீரென எங்களின் முகாமிற்கு புதிய றேடியோக்கள் வந்தது போராளிகளும் தங்களிற்குப் பாட்டுக் கேட்கத்தரப்போகின்றார்கள் என மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனால் அதுவல்ல திட்டம் றேடியோக்களை எடுத்துக்கொண்டு சொர்ணம் எங்களை வந்து சந்தித்தார், அனைத்துக் காடுகளிலும் எல்லா இடங்களிலும் 100 மீட்டர் சுற்றிவர மிதி வெடிகளை நிலத்தில் புதைக்க வேண்டும் பின்னர் நடுப்பகுதியில் ஒரு கொட்டில் போன்ற இடத்தைச் செய்து அனைத்து மிதிவெடிகளும் புதைத்த பின் அக் கொட்டிலில்வைத்து றேடியோவை குறைந்த சவண்டில் போட்டுவிட வேண்டும் ஏனெனில் ஒலியைக் கூட்டி வைத்தால் வேகமாக வெற்றி இறங்கிவிடும் அத்தோடு தேடிவரும் இந்திய இராணுவமும் வேண்டும் என போடுவதாக எண்ணி சந்தேகப்படக்கூடும் அதனால் சவண்டை குறைத்துப்போடுமாறு சொல்லப்பட்டது,

அதை வைத்துவிட்டு 300 மீற்றர் தள்ளி தாக்குதலிற்கு உரியவாறு எங்களை நிக்குமாறு சொல்லப்பட்டது, அதனால் தலைவரின் திட்டத்திற்கு அமைவாக சிறு சிறு றேடியோக்கள் அதாவது வானோளிப் பெட்டிகள் தரப்பட்டது, அதை ஒரு அடந்த காட்டிற்குள் வைத்து 100 மீற்றர் சுற்றிவர ஜொனி மிதிவெடியை விதைத்து விடுவோம், இந்திய இராணுவம் சுற்றி வழைத்துத் தாக்குதலில் ஈடுபாடுவதற்காக மிகக்கிட்டே நெருங்குவார்கள் இருந்தும் றேடியோ சத்தம் கேட்டுக் கோண்டே இருக்கும், கடுமையான கோபம் ஏற்பட்டு பொறுமை இழந்துகிட்டே நெருங்குவார்கள் பின் அவ் இலக்கை நோக்கிச் சுடுவார்கள் அதையடுத்து துப்பரவு பண்ணுவதற்காக கிட்ட செல்வார்கள் அவ் இலக்கை அவர்கள் அடையும்போது சில பொருட்களைத் தொட நேருடும் அதைத் தொட்டதும் மரத்துக்கு மேலே வைக்கப்பட்டவெடி பொருட்கள் வெடிக்கத் தொடங்கிவிடும் பின் அவர்கள் ஓட வெளிக்கிடும்போது மிதிவெடிகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்
காயம் அடைந்தவர்களையும் விட்டிட்டு பின்னால் ஒடி விடுவார்கள், அங்கே போராளிகள் சென்று பார்த்தால் இறந்தவர்களின் வொடிகளும், வெடிபொருட்களும் ஆயுதங்களும் கிடக்கும் அதை எடுத்துக்கொண்டு நாங்கள் வேறு இடம் செல்வோம். ஆனால் தப்பி ஓடிய இந்திய இராணுவம் தங்களின் அதிகாரிகளிடம் சொல்வது இதுதான் அங்கே இல்லை மனிதர்களும் இல்லை பேய் காடுகளிற்குள் கத்துகின்றது அதை தேடிச் செல்லும்போது விடுதலைப்புலிகளிகளின் பொறிவெடியல் சிக்கவேண்டியுள்ளது என்று அதிகாரிகளிற்கு தெரிவிப்பார்கள்
இது அக்காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள செய்தித் தாள்களிலும் வந்தது.பிற்பட்ட காலத்தில் உதயபீடத்திற்கும் அமுத கானத்திற்கும் ஆன வாகனப்பாதை போடப்பட்டது அங்கே பல முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன குறிப்பாக பிக்கப் வாகணங்கள் உளவு ஏந்திரம் போன்ற வாகனங்கள் ஓடுவதற்கான பாதைகளும் அமைக்கப்படு இருந்தது பாதனிகள் செய்யும் தொழிற்சாலை மற்றும் உடுப்புத்தைக்கும் தொழிற்சாலையும் அங்கே போடப்பட்டது திருகோணமலையைச் சேர்ந்த ஜோச் ஐயா உடுப்புத் தைப்பதில் மிகவும் அனுபவமானவர் அதனால் அவர் விடுதலைப் புலிகளால் காட்டிற்குக் கொண்டுவரப்பட்டார் அவரின் தலைமையில்வரிப்புலிச் சீருடை தைப்பதற்கான முகாம் உருவாக்கப்பட்டது
பல ஆண் போராளிககளிற்கு அவர் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது அத்தோடு போராளிகளிற்கு தேவையான வரிப்புலி சீருடைகளும் போராளிகளிற்கான வெடிபொருட்கள் வைப்பதற்கான நெஞ்சுக்கோழ்சர்களும் தைக்கப்பட்டது அது ஒரு கிராமம் போன்ற கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது அடுத்த கட்டம் இந்தியா இராணுவம் தொடர்ச்சியாக பல தோல்விகளைச் சந்தித்தாலும் இறுதியாக ஒரு பாரிய முற்றுகையை மேற்கொள்வார்கள் என்பதை தலைவர் முன்கூட்டிய அறிந்தமையால் மன்னார் மட்டக்களப்பு திருமலை இவ் மாவட்டங்களில் இருந்து சண்டையில் மிகவும் அனுபவம் பாய்ந்த போராளிகளை தலைவர் தனது பாதுகாப்பிற்காக எடுத்தார்,
எடுத்து அந்த ரீம் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில் பயிற்சி கொடுத்து வைக்கப்பட்டது,அதில் மேஜர் கமல், லெப் கேணல் யோய், மேஜர் றோவட், கப்டன் கைலன், லெப் கேணல் சுமன், மேஜர் வசந், என15 போராளிகள் இருந்தார்கள், அப்பொழுது தொடர்ச்சியாக வேறு வேறு பேர்களை வைத்து இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பல சண்டைகளை செய்துகொண்டு இருந்தார்கள்.அதனால் அதைச் செய்வதற்காக கெக்மேற் 1 என்ற பேரில் இந்திய இராணும் ஒரு U வடிவில் அலம்பில் நாயாறு மணலாறு என தமிழர் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து மணலாற்றை முற்றுகையிட்டுயிருந்தது, இந்தியா இராணுவம்
இந்நடவடிக்கைக்காக சுமார் 30000 ஆயிரம் படைகள் களம் இறக்கப்பட்டுயிருந்தன,உணவு, ஆயுத விநியோகம் எவையும் வெளியே இருந்து உள்ளே வரதவாறு அமைத்து தாக்குதலை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகவிருந்தது. இந்த முற்றுகைமூலம், விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட அனைத்துப்புலிகளையும் கொல்வதே அவர்களின் திட்டமாகவிருந்தது இருந்தும் முதலில் தலைவரை அகற்றினால் அனைத்துப்போராளிகளும் சரண்டர் அடைய வேண்டும் அல்லது போராடி அனைவரும் விரச்சாவு அடைய வேண்டும் அல்லது அந்த முற்றுகையை முறியடித்து தங்களின் வீரத்தை நிலைநாட்ட வேண்டும், இந்த மூன்று நிலையில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய ஒரு இறுக்கமான நிலையை அவர்களிற்கு ஏற்பபடுத்தி அவர்களை அழிப்பதே இந்திய இராணுவத்தின் திட்டமாகயிருந்தது,
உணவு, குளிப்பு, உறக்கம் எதையும் நினைத்துப் பார்க்க முடியாதநிலை அதைவிட ஒரு நேரக்கஞ்யையும் குடிக்க முடியாத நிலை தொடர்ச்சியான சண்டை உணவுகையிருப்பு முடிந்த நிலை, இன்றைக்கா அல்லது நாளைக்கா எமது சாவுவரும் என போராளிகள் நாள் குறித்துக்கொண்டு இருந்தாங்கள்,அப்பொழுது காட்டுகரையோரங்களை இந்தியா இராணுவம் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது, பிடிக்க வேண்டியது பாசறைகளோடு சேர்ந்த நடுப்பகுதி மட்டுமே இருந்தது ஆனால் அது உயர்ந்த காடாகவும் இறுக்கமான தரை அமைப்பாகவும் இருந்தது, பங்கர் வெட்டி சண்டை பிடிப்பதற்கு போராளிகற்கு உடல் பலமும் இருக்கவில்லை, இது தான் அன்றைய நிலவரமாகவிருந்தது,
அவ்வேளையில்தான் செக்மேற் 1 என்ற பேரில் ஒரு பாரிய கொமாண்டோ தாக்குதலைச் செய்து தலைவரைப் பிடிக்கத் திட்டம் தீட்டீயது இந்திய இராணுவம் அதைவிட அப்பிரதேசங்களை இலக்குவைத்து கொமான்டோக்களை கெலிக் கொப்டர்களில் ஏற்றிக்கொண்டு தரை இறக்கம் செய்துகொண்டு இருந்தது இந்தியா இராணும், அந்த வேளையில்தான் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில் மேஜர் கமல், RPG அவரின் உதவியாளர் லெப் கேணல் ஜோய்
கப்டன் கைலன், GPM LMG லெப் கேணல் சுமன், மேஜர் வசந், கொம்பாஸ் வளிகாட்டி தளபதி தியாகு விமான எதிர்ப்பு ஆயுதம் மெசள்ஸ் . போராளிகள் ஊடறுத்துக்கொண்டிருந்தார்கள் இவ்வேளை தளபதி தியாகு அவர்களை உடனே திரும்பி புனித பூமி முகாமிற்கு வருமாறு சொல்லப்பட்டது அவர் திரும்பிச் சென்று விட்டார் பின்னர் இதைப் பற்றிப்பார்ப்போம், நித்திகைக்காட்டு வெட்டைக்கு இவர்கள் சென்றதும் இரண்டு கெலிக் கொப்டர்கள் தரையிறங்கி நின்றது அதில் ஒன்றை நோக்கி கப்டன் கைலன் GPM LMG ஆல் செறிவான தாக்குதலை நடாத்திக்?கொண்டிருக்க துல்லியமாக குறிபார்த்து RPG யால் குறிதவறாமல் ஒரு ஹெலிக்கொப்ட்ரை சுட்டு வீழ்தினார் மேஜர் கமல்
அடுத்த ஹெலிக்கொப்ட்டர் கடுமையான சேதத்தோடு தரை இறக்கிய கொமாண்டோக்களையும் ஏற்றாமல் தப்பிச் சென்றது, இச்சண்டை 4 மணித்யாசத்திற்கு மேல் நடந்தது இதில் 20ற்கு மேற்பட்ட இந்திய இராணுவக் கொமான்டோக்களின் பொடிகளையும் நிறைய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்இந்த வெற்றிகரமான பதில்தாக்குதலால் சில நாட்கள் இந்தியா இராணுவத்தின் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டது,

28.01.1988 லெப்டினன்ட் அனிதா தென்தமிழீழத்தில் முதல்பெண் மாவீராக அங்கே சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அடைந்தார். முதல் பெண்மாவீரரும் இவரே ஆவார்
சொந்தப் பெயர்:சித்திராதேவி தம்பிராசா இடம் ஆரையம்பதி, மட்டக்களப்பு.வீரப்பிறப்பு: 19.09.1970 வீரச்சாவு :28.01.1988
சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இந்தியப்படையினர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலினால் கைது செய்யப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு இவரின் கல்லறை யாழ்கோப்பாய் துயிலுமில்லத்தில் நடப்பட்டுள்ளது, தென்தமிழீழத்தில் முதல் வீரச்சாவெய்திய பெண் போராளியும் தென்தமிழீழத்தில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த பெண் போராளியும் இவரே ஆவார்,
இந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருந்தனர். லெப். அனிதாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.

அனிதாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத் தொடங்கினார். இந்திய இராணுவ வருகையின் பின் அனிதாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வர வேண்டியிருந்தது. தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் படைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனிதா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத்துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார். ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனிதா
02/12/1988 அன்று விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அதிபர் பிறேமதாசாவிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தம்,

ஆயுதங்கள் எடுக்கச் சென்ற போராளி தூயாமணி அது பற்றிக் குறிப்பிடுகையில், இதே காலத்தில்தான் இந்தியாவினுடையே அரசியல் கொள்கை எதிர்மாறாக மாறுகின்றது. அக்காலப்பகுதியில் வை.கோவாலசாமி உட்பட அனைத்து ஈழ ஆதரவு அமைப்புக்களும் இந்தியா இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று ஜோச் பெனாண்ட்டோஸ் ஊடாகப் பாரிய அழுத்தம் இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கிக்கொண்டுயிருந்தார்கள். அதவேளை இலங்கை அதிபர் பிறேமதாசாவும் இந்தியா இராணுவம் உடனே வெளியேற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்

ஆனால் இவ்விடயம் தொடர்வாக அதிபர் பிரேமதாசா குறிப்பிடும் போது இது ஒரு நாடு இங்கே நடப்பது அண்ணன் தம்பிப்பிரச்சனை எனவே இந்தியா இராணுவம் எமக்குத் தேவையில்லை அதை நாங்கள் இருவரும் பேசித்தீர்த்து விடுவோம். என்ற இராஜதந்திரச் சொல்களைப் பயன்படுத்தினார். அதைவிட பெரும்பாண்மையான சிங்களமக்கள் வடகிழக்கு இணைப்பு தமிழர்களிற்கு என்று ஒரு தனித்தாயகம் தமிழர்களைப்பாதுகாபற்கு ஒரு ஆயுதப்படை இதை சிங்கள மக்கள் ஒருபோதும் விரும் மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்தவிடயம்.,
ஜேஆர்ஜெயவர்த்தனாவிற்கும் ராஜிவ் காந்திக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினாலோ அல்லது இந்தியவின் படை நடவடிக்கையினாலோ இலங்கைகையின் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என அவர் நம்பினார், 02/01/1989 அன்று அவர் அதிபராக வந்த பொழுது முதல மேடைப் பேச்சில விடுதலைப்புலிகளையும் ஜெ ,வி,பியையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், அத்தோடு ஈரோஸ் தலைவர் பாலகுமரனிடம் பிரமதா குழுவினர் கேட்டபோது அவர் பாலசிங்கத்தோடு பேசுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார், அதை அடுத்து லண்டனிற்கும் கொழும்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆனது,
இருந்தும் அவர் இலங்கையின் நீண்டகால அரசியல் அனுபம் வாய்ந்தவரான பிரேமதசா விடுதலைப் புலிகள் போர் புரிவதற்கான காரணத்தை ஜே,,பி,யினரின் கிழர்ச்சிதொடர்பாகவும் அது இரண்டிற்குமான வேறுபாட்டையும் நன்கு அறிந்தவர், இந்தியப் படைகள் காலவரையின்றி தொடர்ந்து இலங்கை மண்ணிலே தங்கிவிடக்கூடும் என அவர் அஞ்சினார், இருந்தும் இந்தியாவின் கழுகுப் பிடியில் இருந்து முதலில் இலங்கையை மீட்பது அடுத்து இலகுவான முறையில் விடுதலைப் புலிகளைக் கையாண்டு பின்னர் அவர்களை அழிப்பதற்கான வளியைக்கண்டுபிடிப்பது, ஆனால் அவரின் கணிப்பில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் தொகை இரண்டாயிரம் இருக்கலாம் என கருதினார்,
அவர்களை அழிப்பது தனது இராணுவக்திற்கு இலகுவான விடயம் என்றும் சண்டையிடக்கூடிய சிறந்த தளபதிகளான குமரப்பா புலேந்தின் போன்றவர்களை இந்திய இராணுவம் தீர்த்துக்கட்டிவிட்டது என அவர் நம்பினார்.இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அதிபர் பிரேமதாசா அவர்களிற்கும் இந்திய விற்குத் தெரியாமல் புலநாய்வு ரீதியான உறவு ஏற்படுகின்றது, தொடர்பு ஏற்பட்டதும் தான் நேரடியாகப் பிரபாகரன் அவர்களோடு பேச விரும்புவதாகவும் அல்லது இரண்டாவது நிலையில் உள்ளவரோடு பேசத் தாயார் என பச்சக்கொடி காட்டினார், அதிபர் அதை அடுத்து 1987 காலப்பகுதியில் தலைவர் இந்தியவிற்கு பேச்சுவார்தைக்குப் போகும்போது அடுத்த தலைவராக மாத்தையாவை நியமனித்து சென்றார் என்பதை முன்னர் குறிப்பிட்டேன்.
இக்காலப்பகுதியில் மாத்தையா மக்கள் முன்னணித் தலைவராகக் கடமை மாற்றிக் கொண்டிருந்தார், அதனால் மாத்தையாவோடு நேரடியாகப் பேசலாம் என விடுதலைப்புலிகள் அதிபர் பிரேமதாசாவிற்குத் தெரிவித்தார்கள் அவரும் அதை ஏற்றுக்கொண்டார், 1988 கடைசிப்பகுதியில் இந்திய இராணுவத்தோடு சண்டை நடந்து கொண்டுயிருந்தகாலம் அது தலைவரைப் பிடிப்பதற்கான பல சண்டைகளில் தோல்வியுற்றாலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது இந்திய இராணுவம், அவ் வேளையில்தான்அதிபர் பிரேமதாசாவிற்கும் எமக்கும் இரகசியமான முறையில் முதலாவது பேச்சு பேச்சுவார்தை கொழும்பில் நடைபெற்றது,
இந்திய இராணுவத்தினுடைய கண்களில் மண்ணைத்தூவி விட்டு மிகவும் இரகசியமான முறையில் இலங்கைப்படையின் உலங்கு வானுர்தி அடந்த காட்டிற்கு மேலால் மெதுவாகப் பறந்து வந்து மணலாற்றுக் காட்டில் அமைந்து இருந்த விடுதலைப் புலிகளின் பாசறையான வசந்த நாடு என்ற முகாமிற்கு வந்து தரையிறங்கியது. அங்கு இருந்து யோகரத்தினம் யோகி மற்றும் அவரோடு ஒரு சிலரையும் ஏற்றிக்கொண்டு உலங்குவானூர்தி கொழும்பிற்குச் சென்றது, அடுத்து வெளியில் இருந்து பாலா அண்ணையும் பரமுமூர்த்தி என மூவர் கலந்து கொண்டனர் அரசதரப்பில் வறமீத்தும் மற்றும் இருவர் கலந்து கொண்டனர், முதலாவது பேச்சுவார்த்தையில் இந்திய இராணுவத்திற்கு பலமானதாக்குதல். கொடுத்து வெளியேற்றுவது எனவும் அவர்கள் சென்ற பின்னர் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவது என முடிவு எடுக்கப்பட்டது
இப்பேச்சுவார்த்தை பல தடவைகள் நடைபெற்றது அப்பொழுது விடுதலைப் புலிகளிடம் போதிய அளவு ஆயுதம் இல்லையென அதிபர் பிரமசாசாவிடம் சொல்லுமாறு ஹமீத் அவர்களிடம் சொல்லப்பட்டது ஆயுதம் எங்களிற்குத் தாருங்கள் நாங்கள் இந்திய இராணுவத்துடன் சண்டையிடுகின்றோம் அல்லது நீங்கள் இந்திய இராணுதுடன் நேரடியாக அல்லது கெருலா முறையில் சண்டையிட்டு இந்திய இராணுவத்தை வெளியேற்றுங்கள் என பாலா அண்ணை அவர்களுக்குத் தெரிவித்தார்,

இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டு வெல்ல முடியாது என்பதை விளங்கிக் கொண்டபிரேமதாசா விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் தருவதற்கு முன்வந்தார், ஆயுதங்களை எமக்குத் தருவதற்கான வேலைகளை மேற்கொண்டது இலங்கை அரசாங்கம், ஆனால் இந்த விடயம் வெலியோயா பகுதியில் இருந்த சிங்களப் படை முகாம்களிற்குத் தெரியாதவாறு மிகவும் பிரேமதாசாவின் விசுவாசிகளாகவிருந்த படையினரிடம் அவர் இக்கடமையை ஒப்படைத்து இருந்தார் அங்கே இருந்த இரண்டு காம்பிற்கும் தெரியக்கூடாது எனவும் தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வந்து நிக்குமாறு சொல்லப்பட்டது
இதற்கு “ரின்பால்” ஒப்பரேசன் என தலைவரால் பேர்வைக்கப்பட்டது!
இந்நடவடிக்கை தொடர்பாக போராளி தூயாமணி குறிப்பிடுகையில்…!ஆயுதம் எடுக்கச் செல்வதற்கு தாயார் ஆன ரீம் அப்பொழுது வண்போர் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி தியாகு, போராளி ஐஸ்ரின், லெப்கேணல் சுமன், போராளி செபமாலை அப்பையா அண்ணை, தேவர் அண்னை மற்றும் அசோக் என 50 ஆண் போராளிகளும் அடுத்து உடல் வலுவான பெண் போராளிகயான ஜனா மற்றும் அனுசியா உட்ட 15 போராளிகளும் அங்கே செல்வதற்குத் தாயார் செயப்பட்டார்கள்
என ஒரு பலமான அணிதயார் ஆக நின்றது. அடுத்து தலைவர்வந்து சந்தித்து எங்களோடு கதைத்தார். அப்பையா அண்ணையையும், தேவர் அண்ணையையும் நீங்கள் போக வேண்டாம் என தலைவர் சொன்னபோதிலும் அவர்கள் இருவரும் அடம்பிடித்து வந்ததாக போராளி தூயாமணி குறிப்பிட்டார்.
இரவு 10 மணிக்கு நாங்கள் தண்ணீர் கேன்களுடன் நடக்கஆரம்பித்தோம்;சில மணித்தியாலங்கள் கழித்து அவ் இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு சிறிது நேரம் இளைப்பாறினோம். அந்த இடத்தில் இராணுவத்தினர் வழங்கிய கெட்டியான பிளாஸ்ரிக்கலான பச்சை நிறப் பெட்டிகள் தரப்பட்டது அதற்குள் அடிப்படை தேவையான ஆயுதங்களானT 81 துப்பாக்கிகளும் அதற்கான ரவை மற்றும் கையறிகுண்டுகள் அடுத்து பழரின் விஸ்க் கேட் என சிறிதாக உணவுப் பொருட்களும் இருந்தது, அதில் அப்பையா அண்ணையும் தேவர் அண்ணையும் பிளாஸ்ரிக் பெட்டிகளைஇருபரும் தடியில் போட்டு காவிக் கொண்டு செல்ல ஆண் பெண் போராளிகள் முன்னாலும் பின்னாலும் பொருட்களைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள் ,
அனைவரும் பெரிய தடிகளில் போட்டுக் காவிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நடந்துகளைப்பு அடைந்தமையால் இரண்டு இடங்களில் சிறிது ஓய்வு எடுத்து களைப்பு ஆறிய பின் நடக்கத் தொடங்கினோம் இதை கம்பால.போவது என விடுதலைப் புலிகள் அழைப்பார்கள். இது கம்பு என்றால் மட்டக்களப்பு பாசையில் தடி என்பதைக் குறிக்கும் கம்பில் போட்டுக்கொண்டு போவதையே கம்பால என்ற சொல் உருவானது.பின்னர் மிகவும் களைப்படைந்த நிலையில் தலைவரின் முகாம் ஆன புனித பூமிக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் தலைவர் எங்களைச் சந்தித்தார்.உடனே ஆயுதப் பெட்டிகளைத் திறந்து பார்த்தார் பார்த்தவுடன் இந்தியாப் படைகளை அடித்து விரட்ட முடியும் என்ற நம்பிக்கை தலைவருக்கு ஏற்பட்டது,அங்கே சென்று ஆயுதப்பொருட்களை.கொண்டு வந்த அனைவருக்கும் ஒரு பெரிய கண்டோஸ் தலைவரால் வழங்கப்பட்டது.

அடுத்து தங்களின் ஒழுக்கத்தை நிலைநாட்ட என்ன செய்தார்கள் என்பதை விரிவாகப்பார்ப்போம்
தொடரும் அன்புடன் ஈழமதி