ஈரான் (Iran) நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் (Israel) மிகப்பாரிய விஞ்ஞான ஆய்வகம் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஓடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமாவதைக் குறிக்கும் வகையில், உலகளாவிய முக்கிய விஞ்ஞான ஆய்வுத்தளமான இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.

இதில் 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆய்வுகள் நாசமாகியுள்ளன.

விஞ்ஞான தரவுகள் 

இஸ்ரேலின் ரெஹோவோத் பகுதியில் உள்ள இந்த நிறுவனம், நியூரோ வளர்ச்சி குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் இருந்தது.

ஈரான் தாக்குதலில் சுக்கு நூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம் | Iran Destroys Israel Largest Scientific Laboratory

இரண்டு முக்கியக் கட்டிடங்கள், 45 ஆய்வுக்கூடங்கள், ஆயிரக்கணக்கான மாதிரிகள் மற்றும் 22 ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.

ஆய்வு பணி

இந்த ஆய்வகத்தில் 16 ஆண்டுகளாக ஆய்வு பணியில் ஈடுபட்டுவந்த ப்ரொஃ. ஓரன் சுல்டீனர், என்னுடைய ஆய்வுக்கூடம் முற்றிலும் மண்ணாகிப்போனது, எதையும் மீட்க இயலாது என கவலை வெளியிட்டு இருந்தார்.

ஈரான் தாக்குதலில் சுக்கு நூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம் | Iran Destroys Israel Largest Scientific Laboratory

இந்த தாக்குதல், இஸ்ரேலின் அறிவியல் மரபுகளுக்கு எதிரான மிகப்பாரிய இழப்பாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது, உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு எனவும், அறிவியல் வளர்ச்சியில் இஸ்ரேல் பெரும் பங்கு வகித்து வந்தது என்பதற்கான கடுமையான எதிரியல் தாக்கம் எனவும் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments