யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர்  வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றையதினம் (08-10-2024) காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.

இதனையடுத்து, வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து 7 இலட்சம் ரூபா பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்... நடந்தது என்ன? | Person Set Fire Several Lakhs Of Rupees In Jaffna

இந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *