கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (23-10-2024) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாலாவி – பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டபிள்யூ.ஆர்.பீ.டைடஸ் பர்னாந்து என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் மற்றொருவர் படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்... உயிரிழந்த குடும்பஸ்தர்! மற்றொருவர் வைத்தியசாலையில் | Kalpitiya Jeep Motor Cycle Accident Family Man Die

கற்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்றும் புத்தளத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்களுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments