தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (11-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து... மற்றுமொரு சிறுமியும் பரிதாபமாக உயிரிழப்பு! | Southern Expressway Accident 2 Girl Childern Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொட்டாவை மற்றும் பாலட்டுவ இடையே பயணித்த கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் முன்னால் சென்ற லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து... மற்றுமொரு சிறுமியும் பரிதாபமாக உயிரிழப்பு! | Southern Expressway Accident 2 Girl Childern Died

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் இரு மகள்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments