பாகம் ஒன்றின் நாலாவது தொடர்

அப்பொழுது நாம் ஒரு அரச வங்கியை கொள்ளையடிக்கதிட்டமிட்டோம்.

அப்பொழுது நான், குலம், ராகவன் ,ஐயர் ,அனைவரும் புத்தூர் வங்கியைத் தேர்ந்து எடுத்தோம். 5ந்தாம் திகதி அன்று.நாம்திட்டமிட்டது போல் சிறந்த முறையில் வங்கியை கொள்ளையடித்து பணத்தை மூவரிடம் பிரித்துக்கொடுத்துவிட்டோம். ஏனெனில் அது பிடிபடாமல் பாதுகாப்பாயிருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச்செய்தோம். என தலைவர் குறிப்பிட்டார்.,
இக்கொள்ளைக்குப் பின்னர் இப்பொழுது பணப்பிரச்சனை எமது அமைப்பிற்கு இல்லை  போதிய பணம் எம்மிடம் இருந்தது.
இக்காலப்பகுதியில் தான்   தொடர்ந்து விடுதலைக்காகப் போராட இளைஞர்கள் முன்வந்துகொண்டேயிருந்தார்கள்….. இதை அவதானித்த தலைவர் தூரநோக்கோடு தனது விடுதலைப் போரட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என முடிவு எடுத்தார்.

அதற்கு அமைவாக தொடர்ந்து யாழ்பாணத்தில் இருக்காமல் வன்னிக்கு நகர்த்தார்கள். அங்கே சென்று அடர்த்தியான காட்டுப் பிரதேசமான வவுனியாவில் முதல்பயிற்சி முகாம் புளியக்குளக்காட்டுப்பகுதியில் வாங்கப்ப்பட்டது ,அடுத்து பூந்தோட்டத்திலும் பன்றிகொய்தகுளம் ஆகிய பகுதிகளில் வாங்கப்பட்டது,இப்பண்ணைகளிலே புதிதாகவரும் இளைஞர்களிற்கான பயிற்சி வழங்கப்பட்டது, அடுத்தகட்டமாக மன்னார் மடுவில் ஒரு பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டது .ஒலுமடு ஆகிய இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டன.


1976ஆம் ஆண்டு புளியங்குளப்பயிற்சிமுகாம் ஆரம்பிக்கப்படுகின்றது, இந்த முகாம் தற்காலிக கொட்டகையாகவே இருந்தது. இங்கே குறிபிட்ட சிலவாரங்கள் மட்டுமே பயிற்சிகள் நடைபெறும். பாண், பழம்,தேனீர் போன்றவைகளே இங்கே உணவாக இருந்தது .இதுதான் இயக்கத்தின் முதலாவது முகாம் ஆகவிருந்தது,மேற்படி குலம் அவர்கள் குறிப்பிடும்போது அங்கே நானும் பல நாட்கள் தங்கியிருக்கின்றேன். யானைகள் நடமாட்டம் கூடுதலாகயவிருக்கும் என குறிப்பிட்டுள்ளார், இதே ஆண்டு எமது இயங்கத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக முதல் முதலாக வவுனியா பண்ணை ஆரம்பிக்கப்பட்டது,

முதலில் 10த்துப் பேர் வருவதாகச் சொல்லப்பட்டாலும் ஞானம் ,சித்தப்பா இருவர் மட்டுமே வந்து சேர்ந்தாங்கள், இந்தப் பண்ணை கிட்டத்தட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டது,அவர்களே சமைத்து பண்ணை வேலைகளையும் செய்வார்கள், இது விடுதலைப் புலிகளின் இரண்டாவது பண்ணையாகும், மட்டுநகர் திருமலையிலும் பண்ணைகள் உருவாகின.புளியங்குளத்தில் காட்டுக்கரையோடு சேர்ந்த ஒரு தோட்டம் செய்வதற்கான பண்ணையை விலைக்கு வாங்கினார்கள்.
அதைப் பயிற்சி முகாமாகவும் பயன்படுத்த திட்டமிட்டார்கள்,

ஆனால் என்ன பயிற்சி கொடுப்பது எப்படி என தெரியாத காரணத்தால் ஓய்வு பெற்ற நம்பிக்கையான தமிழ் பொலிஸ் அதிகாரிகளிடம் தலைவர் நேரடியாகச்சென்று அவர்களிற்கு வழங்கும் ஆயுதப் பயிற்சித் திட்டத்தை பெற்றுக்கொண்டார், 
அதை பெற்றுக்கொண்டதலைவர் அந்தக் காலப்பகுதியில் றிவ்வோலர் கைத்துப்பாக்கிகள் என சில ஆயுதங்கள் வேண்டியதாகவும் அந்த ஆயுதங்களிற்கான பயிற்சியை தானேநேரடியா வழங்கியதாவும் தலைவர் குறிப்பிட்டார். அதே முகாமில் வைத்துத்தான்

05/05/1976 புதிய புலிகள் என்ற பெயரை தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயரை மாற்றி இலங்கை தொடக்கம் உலக நாடுகள்வரை செல்வாக்குமிக்க பெயராக நிரூபித்தார் வே.பிரபாகரன். பின்னர் அதே ஆண்டு அதே மாவட்டத்தில் இளைஞர்கள் கூடுதலாக வந்துகொண்டுயிருந்த காரணத்தால் புதிதாக பூத்தோட்டத்தில் ஒரு பண்ணையை வாங்கினார்கள். பெரிய எதிர்பார்ப்போடு அப்பண்ணையை வாங்கினாலும் பெரிதாக எவரும் இணைய முன் வரவில்லை எதிர்மாறாக சித்தப்பா மற்றும் கறுப்பி என இருவர் மட்டுமே இணைந்துகொண்டார்கள்திட்டமிட்டாற் போல் அவளிற்குப் பயிற்சி நடந்தது

1976 இதே காலப்பகுதியல் தென்நிலங்கையில் நடந்த தமிழர் மீதான இன வேற்றுமையை நேரில் கண்ட திருமதி கமலினி அவர்கள் குறிப்பிடுகையில், இவ் இனக்கலவரம் கண்டி மலையகப்பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளான கல்கிசை மாத்தறை மற்றும் நாரகம் பிட்டிய பகுதிகளில் இடம் பெற்றன அதில் பேராதனை பல்கலைக்கலகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலய அர்ச்சகர்கரை அங்கு இருந்து அடித்துக் கலைத்ததோடு அங்கு இருந்தமையில்களையும் வெட்டிக் கொண்றார்கள், அக்கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர், அவர்களிற்கு மருந்து கட்டாமல் விசம் கலந்த ஊசி போட்டு அனைவரையும்கொலை செய்தார்கள்,இனி அடுத்து என்ன நடந்தது எனபார்ப்போம்

.14/05/1976 ஆம் ஆண்டு துணிச்சல் மிக்க தந்தை செல்வநாயகம் இலட்சக் கணக்கான  தமிழர்கள் முன்னிலையில் வட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழப் பிரகடனம் செய்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து, பன்னாகம் மெய்கண்டான் வித்தியாசாலையில் தமிழீழமே தமிழர்களிற்கு நிரந்தரத்தீர்வாக அமையும் எனத் தமிழீழத்தீர்மானம் தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து 77 பொதுத் தேர்தலில் தமிழீழத்திற்காக வாக்களியுங்கள் என்று வட கிழக்கு தமிழர்களிடம் கோரிக்கை விடப்பட்டது, அத்தோடு தமிழீழ வரைபடத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் பார்வைக்காக வடகிழக்கு அனைத்துக் கிராமங்களிலும் ஒட்டப்பட்டது, இது வடக்கில் நடந்துகொண்டு இருக்க மட்டக்களப்பில் தேவர் ஆகிய நான் திரு பரமதேவா மோகனச்சந்திரன் சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் நோட்டீசை ஒட்டினோம்.

  02/07//1976அன்று தலைவர் ,பற்குணம் நாராயணன்,இவர்கள் மூவரும் சென்றுநடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளருக்கு சாவொறுப்பு வழங்கினார்கள்.

  அடுத்தநடவடிக்கையாக  02/07//1976 அன்று தலைவர் ,பற்குணம் நாராயணன் இவர்கள் சென்றுஉரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளரை பொன் சிவகுமாரனைக்காட்டிக்கொடுத்தமைக்காக வெற்றிகரமாகக் சுட்டு இவரிற்கான மரணதண்டணையைநிறைவேற்றினார்கள்.சரியாக இவர் காட்டிக்கொடுத்து ஒரு மாதத்திற்குள் இவ் மரணதண்டனை தலைவரால் வழங்கப்பட்டது.
இதே காலப்பகுதியில் பரமதேவா தனிக்குழுவாகயிங்கினார், அப்பொழுது அரசுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார், அப்பொழுது பரமதேவா தேவர் அன்னை மற்றும் கல்லடிச் சாந்தி இவர்கள் சென்று மட்டு நாவக்குடாவில் நின்ற அரசிக்குச் சொந்தமான வஸ் ஒன்றை எரித்தார்கள்,


அதை விட மேலும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பின்னர் அயலவர்களால் காட்டிக் கொடுக்கட்பட்டு அவரும் அரச படைகளால் கைது செய்யப்பட்டு தென் நிலங்கையில் உள்ள ஜெய்லில்அடைக்கப்பட்டு இருந்தார் பின்னர் அவர் எப்படி எம்மோடு இணைத்தார் என்பதை அந்த ஆண்டு வரும் போது பார்ப்போம்,

  இப்பொழுது இயக்கத்தில் இருந்த மொத்த உறுப்பினர்களின் தொகை 10 தலைவர்01 செட்டி02/ மாத்திநாராயணன்03/ பற்குணம்04/ கலாபதி05/ ஐயர்06/ ராகவன்07/ குலம்08 உமாமகேஸ்வரன்9  செல்லக்கிளி 10 பத்தாவது செல்லக்கிளி அம்மான் அமைப்பில் இணைந்த பின்னர்தான் இயக்கம் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது.

இவனின் சொந்தப் பெயர் செல்வநாயகம் . இயக்கம் வைத்த பெயர் செல்லக்கிளி, சொந்த முகவரி கல்வியங்காடு, யாழ்ப்பாணம். இவனின் குடும்பம் ஒரு ஏழை விவசாயக் குடும்பம் ஆகும். அதனால் கல்வியை தொடரமுடியாத நிலையில் அதைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை ஊர்தியின் ஓட்டுனராகக் கடமையாற்றினான்.இவனின் திறமை செல்லக்கிளி இயக்கத்தில் இணைந்ததும்;   தலைவர் உட்பட மூத்தபோராளிகள் அனைவரையும் “டேய்” என்று தான் கூப்பிடுவான்.

அவன் தலைவரை அழைக்கும் விதம் “டேய் தம்பி” நேரம் போய்ற்றுது ஓடிவாடா, தலைவரும் ஓடிவந்து செல்லக்கிளிக்கு முன்னால் நிப்பார்.இதைப்பார்த்ததும் மூத்த போராளிகள் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் எங்களின் நிலமை எப்படி? இருக்கும் என கடுமையான பயத்தில் காணப்படார்கள்.இது தொடர்பாக ஒரு சிலர் தலைவருக்குப் புகார் அளித்ததாகவும்; அதற்குத் தலைவர் சொன்ன பதில்; “செல்லக்கிளி அண்ணன்” எங்களுக்கு வயதிற்கு மூத்தவர். அவர் எங்களை உரிமையோடு கையாளுகின்றார்.

அவருக்கு நாங்கள் கட்டுப்பட்டால்தான் நாளைக்கு மற்றவர்கள்  எங்ககளிற்குக் கட்டுப் படுவார்கள் என சிரித்த முகத்துடன் விளக்கப் படுத்தினார்.செல்லகிளியே எமது விடுதலை அமைப்பின் ஆளுமை மிக்க முதல் இராணுவத் தளபதி ஆவார். அவரின் பசுமாடுகளை விற்று  முதல் முதலாக ஒரு சிறிய ரகS.M.G துப்பாக்கியை வேண்டினார், அவரின் வீரச்சாவிற்குப் பிறகு சிறிது காலம் இத் துப்பாக்கியை தலைவர் பயன்படுத்தினார்.

பின்னர் கிட்டு அண்ணை பயன்படுத்தினார். இறுதியாக இத் துப்பாக்கி விசுவமடுக் குளத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருந்த எமது படையணி ஆயுதக் களஞ்சியமான 1.1 முகாமில் மிவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது..

.1976,1977,1978 இதே காலப்பகுதியில் அமைப்பில்இயக்கிக்கொண்டிருந்தவர்கள்  ஜோன்01, பேபியண்ணை02, விசு03 ,சோட் பாலா04,நிர்மலன்05,வாத்திநாரயணன்06, ரவி07,காந்தன்08 ,கலாபதி09, பீரிஸ்10,  மனோமாஸ்ட்டர்11, உமாமகேஸ்வரன்12, ஐயர்13 ,பண்டிதர்14, செல்லக்கிிளி15, யோகன்பாதர்16,குலம்17,குமரச்செல்வம்18, தலைவர்19 எனஆளணிகூடிக்கொண்டே சென்றது. 

ஆரம்பத்தில் பரமதேவா தனிக்குழு அமைத்து அரச படைகளிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மட்டக்களப்பில் செய்துகொண்டிருந்தார் .  ஒருநடவடிக்கையின்போது பரமதேவா சிங்களப்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர் தனது குழுவிற்கு நீங்கள்தனியாக  செயல்பட வேண்டாம் புலிகளோடு இணைந்து செயல்படுங்கோ…! என தெரியப்படுத்தினார்.

அதனால் அவரின் குழுவைச் சேர்ந்த மைக்கல், மோகன், அக்பர் மாணவன், காந்தன் என பலர் கிழங்கில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டார்கள்.  செல்லக்கிளியை முதலில் தலைவருக்கு அறிமுகம் ஆக்கியவர் செட்டி என்பதை மறந்துவிட முடியாது.

02/07/1976ஆம்ஆண்டு அக்காலப்பகுதியில்தான் சிவகுமாரனை காட்டிக்கொடுத்த இரண்டாவது நபரான நடராஜன் என்பவரை பேவி  என்பவர் கைக்குண்டு எறிந்து அவரைக்கொலை செய்தார்.

அவர் அந்நேரம் பிரபாகரன் தலைமையிலான அமைப்பில் இணையவில்லை. 
முன்னரே தனி நபராகச் சென்று பல தாக்குதலை அசாங்கத்திற்கு எதிராகச் செய்துள்ளார்.இதை அறிந்த தலைவர் நேரடியாக அவரின் வீட்டிற்குச்சென்று அவரையும் தனது அமைப்பில் இணைத்துக்கொண்டார்.அக்காலப்போக்கில் இளங்குமரன் அல்லது பேபி எனப்பேர் மாற்றப்பட்டு ஒரு சிறந்த போராளியாகக்கடமையாற்றினார்அது மட்டும் அல்ல இறுதிவரை தமிழீழக் கல்விக்கலகப்பொறுப்பாளராகயிருந்துள்ளார் இவருக்கு என்ன நடந்தது என பிறகுபார்ப்போம்

அடுத்து தமிழேந்தி அண்ணை போராட்டத்தில் இணைந்துகொண்டார்.  அவர் இணைந்தது தொடர்பாக  புதுக்குடியிருப்பு78  முகாமில் வைத்து என்னிடம் தெரிவிக்கையில்;  அக்காலப்பகுதியில் நான் புத்தூர் வங்கி முகாமையாளர் பாங் மனேஜர் ஆகாவிருந்தேன். அப்பொழுது எனக்கு விடுதலைப் புலிகளின் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இருந்தும் சிறிதளவு அவர்களை நான் நம்பினேன், தொடர்ந்து வங்கியைக் கொள்ளை அடிப்பது தொடர்பாக என்னோடு கதைத்தார்கள். முன்னர் நான் பயந்தேன். பின்னர் எனக்கு போதிய விளக்கம் தந்தமையால்; நான் அவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டேன்,

அடுத்து ஒரு வீட்டில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமல் ஒரு காரை எடுத்துக்கொண்டு அவ் “பாங்கை” கொள்ளையிடப் பயன்படுத்தினார்கள். பின் அவ்வேலை முடிந்ததும் ; அக்காரைக் கொண்டு அவர்களின் வீட்டிற்குப்போனது மட்டும் அல்லாமல் அது இருந்த இடத்திலே அதை விட்டுச் சென்றும் இருந்தார்கள்.பின்னர் அக் கார்க் காரரை நான் கண்டு கதைத்தபோது; அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் தங்களின் இனத்தை எப்படியாவது பாதுகாக்க வேண்டும்! என்பதற்காக துடிப்போடு இயங்கும் எங்கட பொடியல் ஆகாத்தான் இருக்கும் என என்னிடம் குறிப்பிட்டார்,

எனவே இவர்களின் நேர்மையான செயல்பாட்டைக்கண்டுதான் இவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக அவர் எம்மிடம் தெரிவித்தார். இவர் இறுதி வரைக்கும் தமிழீழ நிதிப்பொறுப்பாளராக இருந்தவர் என்பதை எவராலும் மறக்க முடியாது.என்ன கஸ்ட்டப்பட்டாவது எமது 30 வருடப் போராட்டத்தில் சிறுதானியங்களான கைப்பி சோழன்களை பயரிட்டு எமது போராளிகளின் உணவுத் தேவைகளையும் அவர்களின் உடமை தேவைகளையும் சிறந்த முறையில் செய்துள்ளார் ,அது மட்டும் அல்ல போராளிகளிற்கு ஆரம்ப காலப்போராட்டவரலாறுகளையும் சிறந்த முறையில் படிப்பித்துள்ளார், இறுதியாக 10/03/2009 எதிரிகளின் செல்தாக்குதலில் புதுக்குடியிருப் செந்தூரன் சிலைக்கு அருகாமையில் அவரோடு சேர்த்து ஐம்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அதே நேரம் அவரும் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்,

14/02/1977  சிங்கள்புலனாய்வாளர் கருணாநிதிக்கு தலைவரால் மரணதண்டனை வழங்கப்பட்டது .

 கருணாநிதி  தலைமையிலான சிங்களக்      கைக்கூலிகள் பிரபாகரன் மற்றும் அவரின் இளைஞர்களை இலங்கை முழுவதுமாகத் தேடுகின்றார்கள்…

.. அரசாங்கத்தால் தமிழர்களிற்கு புலனாய்வுவேலை, மற்றும் அரசவேலையென, வழங்கி தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கான வேலைகளை செய்தது சிங்கள அரசாங்கம்.அந்தப்பட்டியலில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கடமையாயாற்றிய கருணாநிதியும் அடங்குவார். இவர் தங்காவையும், பேவி அண்ணாவையும் பின்தொடர்ந்த காலம் அது, கருணாநிதி மீது

நடவடிக்கை எடுப்பதற்காக14/02/1977 அன்றைய நாள் காங்கேசன்துறை வீதியில் இருந்து அவர் மிதிவண்டியில் போகும் திசையைநோக்கி தம்பியும்செல்லக்கிளியும் அவர் பின்னால் மிதிவண்டியில் சென்றுகொண்டுயிருந்தார்கள்…..,அதற்குப்பின்னால் இடைவெளிவிட்டு குலமும், பேவி அண்ணாவும் சென்றுகொண்டேயிருந்தார்கள்.

எமது திட்டத்தின்படி போடவேண்டிய இடத்திற்குச் செல்லாமல் இடையில் இருந்த பாதையால் மிதிவண்டியை திருப்பிவிட்டார் கருணாநிதி ஆனால் தம்பியும், செல்லக்கிளியும் அவர் பின்னால் சென்று குறி தவறாமல் சுட்டு விட்டு பின்னர் எங்களை சந்தித்தபோது புன்சிரிப்புடன் நடந்த விடயத்தை எங்களிடம் சொன்னார்கள். அடுத்து நாங்கள்சேர வேண்டிய இடத்திற்கு விரைவாகப்போய்சேர்ந்தோம்.

1977   இதே ஆண்டில் பண்டிதர் என்ற இளைஞன் அமைப்பில் இணைக்கப்பட்டார். பண்டிதர் வந்தவுடன் தனக்கு மட்டக்களப்பில் ஒரு நண்பன் இருப்பதாகவும் அவனையும் அமைப்பில் இணைக்கலாம் என்று தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.அதைத்தலைவர் ஏற்றுக்கொண்டார் 1977ம் ஆண்டு முதலாம் மாதம் மட்டக்களப்பில் இருந்து யோகன்பாதர் இணைக்கப்பட்டார், அன்றிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கூடுதலான இளைஞர்கள்கிழக்கில் இருந்துவரத் தொடங்கினார்கள் . இதே ஆண்டு மலையகத்தை சேர்ந்த குமணன்,சாந்தன்  இவர்கள் அமைப்பில் உறுப்பினர்களாகஇணைக்கப்பட்டார்கள்.

 18/05/1977ம்ஆண்டுதேனீர் கடையில்வைத்து புலனாய்வாளர்களான இரு சண்முகநாதனிக்கும் தலைவரால் சாவொறுப்பு வழங்கப்பட்டது,

  திங்கள்கிழமை காலை தலைவரும், சோட்வாலவும் இணுவில்லை நோக்கி நடந்து சென்றார்கள். அங்கே சென்று சாலை அருகாமையில் இருந்த தேனீர் கடை அருகில் நின்றார்கள், சண்முகநாதன் என்ற ஒரே பெயரில் இரண்டு தமிழ் சி.ஐ.டியினர் நின்றார்கள், ஆனால் அதில் ஒருதன் நல்லவன், ஒருதன் கெட்டவன், அவன் தலைவரையும் சோட்வாலாவையும் கண்டு விட்டான். அவர்களைக் கண்டதும் தலைவர் உடனே கைமுந்திவிட்டார், உடனே தனது றிவ்வோலரை எடுத்துச் சண்முகநாதனை நோக்கிச் சுட்டார். .

ஆனால் ரவுன்ஸ் மிஸ் ஆகி வெடிக்கவில்லை, உடனே சண்முகநாதன் தலைவரைப் பாய்ந்து கட்டிப்பிடித்து நிலத்தில் இருவரும் உருளுகின்றார்கள்…. இதை சோட்வாலாவும் அடுத்த சண்முகநாதனும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் சண்முகநாதனிடம் றிவ்வோலர் இருக்கின்றது, அப்போது சோட்வாலாவிடமும் ஆயுதம் இல்லை, இது முக்கிய பிரச்சனையாகயிருந்தது ஆனால் சண்முகநாதன் சோட் வாலவிடம் சொன்னான்” இருவரும் மல்லுக்கட்டி வெல்லுறவன் வெல்லட்டும் நாம்இருவரும் பார்த்துக் கொண்டுயிருப்போம்

” என ஆலோசனை வழங்கினான்.அதற்கு சோட் வாலா சொன்னார் “தப்பிக்கு ஒன்று என்றால் நான்பாத்துக்கொண்டிருக்க மாட்டேன்” என்றான். இதைக் கேட்டதும் சண்முகநாதன் பாய்ந்து சோட்வாலாவை கட்டிப் பிடித்தான். பின்னர்சோட்வாலாவும், சண்முகநாதனும் கட்டிப் பிடித்து நிலத்தில் உருண்டு கொண்டேயிருந்தார்கள், அவ்வேளை சன்முகநாதனின் இடுப்பில் இருக்கும் றிவ்வோலரை சோட்வால அவதானித்துவிட்டான். ஒரு மாதிரியாக சண்முகநாதனின் றிவ்வோலரை இடுப்பில் இருந்து உருவி எடுத்தான் சோட்வாலா, 

அதை எடுத்ததும் சண்முகநாதனின் வயிற்றுப்பக்கமாக ஒரு வெடி வைத்தான் சோட்வாலா வெடிச் சத்தம் கேட்டதும் தலைவரைப் பிடித்துயிருந்த அடுத்த சண்முகநாதன் பயத்தில் தனதுகையை விட்டான். விட்ட உடனே வேகமாகச் செயல்பட்ட தலைவர் சண்முகநாதனின் தலையில் சுட்டார் உடனே சண்முகநாதன் அவ்விடத்திலே கொல்லப்பட்டான்.அடுத்த சண்முகநாதன் வயிற்றுக் காயத்துடன்  உயிருக்குப் போராடிக்கொண்டேயிருந்தான். அதை அவதானித்த தலைவர் இவன் அனைத்துப் பிரச்சனைகளையும்பார்த்து விட்டான், இவனை விட்டால் பிற்காலத்தில் எமக்கு ஆபத்தென எண்ணி அவனிடம் சென்று நீ நல்லவன்தான் என்னை மன்னித்துக்கொள் என்று சொல்லி விட்டு அவனின் மண்டையில் சுட்டு மரணதண்டனை வழங்கினார். 2 காவற்துறையினரையும் இணுவிலில் வைத்து இருவரின் சிறந்த செயல்பாட்டால் அவர்களை கொல்ல முடிந்தது. 

26/01/1978  கனகரத்தினத்தினத்திற்கு தலைவர், செல்லக்கிளி மற்றும் உமாமகேஸ்வரன் மூவரும் கொழும்பிற்குச் சென்று அங்கே வைத்துஅவருக்கு சாவொறுப்பு வழங்கினார்கள். 

 

இவர்பொத்துவில் தொகுதியில் தமிழரசிக் கட்சிசார்பாக போட்டியிட்டு கூட்டணி வேட்பாளராக அமோக வெற்றி ஈட்டினார்.  அதனால்அவர்எம்.பி ஆகத் தெரிவுஆனார்.  ஆனால் தொடர்ந்து தமிழர்களின் உரிமைக்காகப் போராடாமல் சிங்களக்கட்சிகளோடு விலைபோனமையால் அவரிற்கு உயர் தண்டனையான சாவொறுப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கின்றார்….. அதற்கு அமைவாக தலைவர் ,செல்லக்கிளி அம்மான் மற்றும் உமாமகேஸ்வரன் இவர்கள் மூவரும் கொழும்பிற்குச் சென்றுகொண்டிருந்தார்கள், அக்காலப்பகுதியில் எமது உறுப்பினரான வாத்திநாராயணன் கொழும்பு றேடியோ சிலோன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அதனால் இவர்கள் மூவரும் கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சென்று இரவு அங்கேயே தங்கினார்கள் .

ஆனால் அங்கே அவரோடு வேறு ஓரு இளைஞனும் தங்கி நின்று வேலை செய்தான். இவர்கள் எங்கே செல்வதாக இருந்தாலும் நாய் மோப்பம் பிடிக்காத மிளகுதூள் பக்கெட் கொண்டு செல்வது வழமை, அன்று இவர்கள் கொண்டு சென்ற மிளகு தூள் பவுடர் பக்கெட் வெடித்து கொட்டுப்பட ஆரம்பித்து விட்டது, அதனால் அவ் அலுவலகத்தில் கிடந்த ஒரு பேப்பரை எடுத்து அப்பக்கெட்டை கொட்டுப்படாமல் சுத்தி வைக்கிறார்கள், ஆனால் அதுதான் ஒரு தடயமாக வரப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின்னர் அடுத்த நாள் காலை கனகரெத்தினத்தின் கொழும்பு அலுவலகத்திற்கு தலைவர், செல்லக்கிளி மற்றும் உமாமகேஸ்வரன் மூவரும் சென்று அவரைச் சந்திக்கின்றார்கள்…..கனகரெத்தினம் வந்ததும் உமாமகேஸ்வரன் பைலைக் கனகரெத்தினத்திடம் கொடுக்கின்றார், கனகரெத்தினம் (ப்)பைலைத்திறந்ததும் அதற்குள் புலிச்சின்னம்இருந்தது. உடனே கனகரெத்தினத்தை நோக்கி தலைவர் சுடுகின்றார்,

அடுத்து செல்லக்கிளி அம்மானும் அவரை நோக்கிச் சுடுகின்றார்; கடசியாக உமாமகேஸ்வரன் அவருக்கு அருகில் சென்று சுடுகின்றார்; இருந்தும் வெடி முக்கிய இடத்தில் படவில்லை; ஆனால் அவன் செத்து விட்டான் என எண்ணி பவுடரை உடைத்துத் தூவி விட்டு மூவரும் தப்பி வன்னிக்குச் செல்கின்றார்கள். ஆனால் அவன் அன்று சாகவில்லை

  26/01/1978சிகிச்சை பலன் அளிக்காமல் சாவடைந்தார்.சம்பவம் அறிந்து வஸ்த்தியாம் பிள்ளை உடனே கனகரெத்தினத்தின் கொழும்பு அலுவலகத்திற்குச்செல்கின்றார்; அங்கே சென்ற வஸ்த்தியான்பிள்ளை அங்கே காணப்படும் தடையங்களை அவதானிக்கின்றார்; இவர்கள் பவுடர் (ப்)பக்கெட்டைச் சுத்திய பேப்பர் வஸ்தியான் பிள்ளையின் கையில் கிடைக்கின்றது; அதைவாசித்துப்பார்த்தால் வாத்தி நாராயணனின் கொழும்பு அலுவலகத்தின் விலாசம் இருந்தது;  உடனே வஸ்தியான்யான்பிள்ளை தலைமையிலான பொலிஸார் வாத்தி நாராயணனின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்; அங்கே வாத்தி நாராயணனும் அவரோடு சேர்ந்து வேலை செய்யும் இளைஞனும் இருந்தார்கள்.அங்கே  சென்றதும் முதலில் அந்த இளைஞனிடம் விசாரணையைமேற்கொண்டார்கள்;

அவன் சொன்னான்;” இங்கே உமாமகேஸ்வரனும் ஒரு கட்டையனும்; ஒரு நெட்டையனும்; வந்தார்கள் என்று”….. கட்டையன் என்றால் தலைவரையும்; நெட்டையன் என்றால் செல்லக்கிளி அம்மானையும்; குறிக்கின்றது. இப்படி அவன் வஸ்தியான்பிள்ளையிடம் சொன்னான் அடுத்து வஸ்தியான்பிள்ளை வாத்தி நாரயணணிடம் உமாமகேஸ்வரனின் வீடு தெரியுமா என கேட்டார், அவர் தெரியும் என பதில் அளித்தார். உடனே வாத்திநாராயணனை கூட்டிக்கொண்டு உமாமகேஸ்வரனின் தெல்லிப்பளையில் உள்ள வீட்டிற்கு செல்கின்றார்

வஸ்தியான்பிள்ளை  அங்கே சென்றதும் வாத்திநாராயணன் வஸ்தியான்பிள்ளையிடம் சொல்கின்றார்” நீங்கள் கேற்ரடியில் நில்லுங்கோ நான் போய் அவரைக் கூட்டிவருகின்றேன்” என்று அதற்கு வஸ்தியான்பிள்ளை அனுமதி வழங்குகின்றார்…….தொடர்ந்து உள்ளே சென்ற வாத்திநாராயணன் மதிலிற்கு மேலால்பாய்ந்து ஓடித்தப்பிவிட்டார்.நீண்டநேரம் வெளியில் காத்துக்கொண்டேயிருந்த வஸ்தியான்பிள்ளை உள்ளே சென்று ஒரு வயசான அம்மாவிடம் கேட்டபோது  ஒருத்தன் மதிலால் பாய்ந்து ஒடுவதாக அவர் குறிப்பிட்டார். வஸ்த்தியான்பிள்ளை தங்களை இவன் ஏமாத்தி விட்டான் என நினைத்துவிட்டு அவர்கள் மீண்டும் கொழும்பிற்குச் சென்றார்கள்.

இது இப்படி இருக்க வாத்திநராயணன் தப்பி ஓடி வந்து தலைவரோடு இணைந்துகொண்டார். அப்பொழுது இவர்கள் மன்னார் மடுவில் இருந்த இரகசியப் பண்ணையொன்றில் இருந்தார்கள். அங்கே வாத்தி நாராயணன், உமாமகேஸ்வன், தலைவர் என பல முக்கிய உறுப்பினர்கள் அங்கே இருந்தார்கள்.தொடர்ந்து வஸ்தியான்பிள்ளை சும்மா இருக்கவில்லை. இவர்கள் தங்கும் மறைவிடத்தை இவர்களோடு இருந்த கணேசவரப்பிரகாசம் என்பவரைக் கைது செய்ததன் ஊடாக இடத்தை அறிந்த கொண்ட வஸ்தியான்பிள்ளை அவரையும் கூட்டிக் கொண்டுதேடுதலிற்குப் புறம்பட்டுச் சென்றார்.

தலைவர், முகுந்தன், இருபரிடமும் றிவ்வோளர் இருந்தன ஆனால் செல்லக்கிளி அம்மானிடம் ஒரு ஆயுதம் மட்டுமே இருந்தது இருந்தும் திடீர் திடீர்ரென பொதுமக்கள் அனுமதியின்றி பண்ணைக்குள் உள்நுளைவதால் அவர்கள் சில நேரம் அதைப்பார்த்து விடுவார்கள் என்பதற்காக பண்ணையில் இருந்து 500 மீற்றறில் அதை மறைத்து வைத்துயிருந்தார்,அம்மான் அன்று அம்மானும் 4 இளைஞர்களும் நிராயுதபாணியாகப் பண்ணையில் நிக்கின்றார் , ஆனால் மிகவும் அனுபவமான வஸ்தியான்பிள்ளை தலைமையில் நாலு பொலிஸ் காறர்கள் SMG துப்பாக்கியுடன் ஜீப்பில்வந்துகொண்டுயிருக்கின்றார்கள்

நிராயுதபாணியான செல்லக்கிளி அம்மான் என்ன செய்யப் போகின்றார் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்,

தொடரும்

அன்புடன் ஈழமதி

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *