ஒன்பது மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) பூமியில் கால் பதிக்கவுள்ளா்ர்.

இந்த நிலையில், குறித்த நிகழ்வவை தற்போது நாசா நேரலையாக ஒளிபரப்புகின்றது.

முதலாம் இணைப்பு 

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பேரி வில்மோர்(Barry Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சென்ற இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டு தொழில்நுட்ப கோளாறு  பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, 9 மாதங்களாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ்  அனுப்பிய விண்கலத்தில் இன்று(18) பூமிக்கு திரும்புகின்றனர்.

நாசா நேரலை

அமெரிக்க நேரப்படி, நேற்று(17) இரவு 10.45 மணிக்கு க்ரூ டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று(18) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு விண்கலம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாசா தனது எக்ஸ் பக்கத்தில் நேரலை செய்கிறமை குறிப்பிடத்தக்கது.  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *