6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்கள் திறம்பட ரத்து செய்யப்பட்டு அவர்களை வேலை செய்யவோ அல்லது சலுகைகளை அணுகவோ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது, புலம்பெயர்ந்தோரை சுயமாக நாடுகடத்த ஊக்குவிக்கவும், சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டும் ட்ரம்ப் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது இலக்க எண்

இதேவேளை, இந்தக் கொள்கையால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவில் நுழைந்து தங்க அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!! | New Crisis For Immigrants In Trump S America

அவர்கள் சட்டப்பூர்வமாக சமூகப் பாதுகாப்பு எண்களைப் பெற்றிருந்துள்ளதுடன், அவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.இந்த எண்கள் பல்வேறு உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் வருவாய் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான பங்களிப்புகளைக் கண்காணிப்பதும் அடங்கும் என கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சி

அதன்படி, புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்களை அகற்றுவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் பல நிதிச் சேவைகளிலிருந்து அவர்களைத் துண்டித்து, வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதாக தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!! | New Crisis For Immigrants In Trump S America

இவ்வாறானதொரு பின்னணியில், பைடன் நிர்வாக திட்டங்களின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஒடுக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கடுமையான நடவடிக்கை கருதப்படுகிறது

எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோரை ஒடுக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *