மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, Strait of Hormuz பகுதியில் ஈரானிய கடற்படைக்கு சொந்தமான 16 கப்பல்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, Iran மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், இரு நாடுகளும் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தாக்குதல்களின் விளைவாக நச்சுப் பொருட்கள் கலந்த அமில மழை பெய்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலைமை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலை மிகுந்த பதற்றமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையா காணொளியை இங்கு காணலாம்….

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments