கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்குயாகுசி பூங்காவில் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை மார்ச் 20 அன்று அவதூறான வாசகங்கள் மற்றும் வர்ணங்களால் சேதப்படுத்திய சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, தொடர் விசாரணையின் பின் மார்ச் 31 அன்று பிராம்ப்டனைச் சேர்ந்த இளைஞரை $5,000 க்கும் மேல் மதிப்புள்ள பொதுச் சொத்துக்களுக்கு சேதம் (Mischief over $5,000) செய்த குற்றச்சாட்டுகளுடன் கைது செய்துள்ளனர்.

இளையோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரது அடையாளம் வெளியிட முடியாது.

கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் ;14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு | Attack Tamil Memorial In Canada Boy Charged

பீல் பிராந்திய காவல்துறைத்தலைவர் நிஷான் துரையப்பா, “சமூகத்திற்கு முக்கியமான நினைவிடங்களை வெறுப்புணர்வால் சேதப்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்து, Hate Crime Unit இனை வலுப்படுத்தி, சமூக பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி 2025 மே மாதம் திறக்கப்பட்டு, திறந்தபடியே சில முறை சமூக விரோதிகளால் இலக்கு செய்யப்பட்டதாகவும், இத்தகைய சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 905-453-2121 (ext. 6098) அல்லது அடையாளம் காட்டாமல் Crime Stoppers மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments