தமிழீழமே ஒரே தீர்வு எனத் தமிழக மக்கள் முழக்கமிடும் காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மிக எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட குறித்த காணொளியே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

உள்நாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளைத் தாண்டி சர்வதேச அளவிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நினைவேந்தல்கள் குறித்த செய்திகள் மற்றும் பதிவுகளை அதிகம் காணக்கூடியதாகவுள்ளது.

ஈழப் பிரச்சினை

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கும் சூழலில், ஈழத்தமிழர்களுக்கு அவர் மீதான பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

இத்தகையதொரு அரசியல் சூழலில் இந்த ஆண்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருவது ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலத் தலைமைகள் ஈழப் பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் இருக்கும் ஈழ மக்கள், தற்போதைய புதிய முதலமைச்சர் விஜய் மீது பலத்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

மாற்று அரசியல்

மாற்று அரசியலைப் பேசும் புதிய தலைமுறையின் ஆட்சியில் தங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சர்வதேச நீதி போன்ற கோரிக்கைகளுக்குத் தமிழக அரசிடமிருந்து வலுவான தார்மீக ஆதரவு கிடைக்கும் என ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் நம்புகின்றன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் தற்போதைய இந்த உணர்ச்சிப்பூர்வமான எழுச்சியும் வீதி முழக்கங்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு மக்களின் அடிமனது விருப்பத்தை உணர்த்தும் அரசியல் சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் குரலாகப் புதிய தமிழக அரசு எப்படி ஒலிக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் தற்பொழுது உற்று நோக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments