களனி ஆற்றில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்புகடுவெல, வெலிவிட்டவில் உள்ள களனி ஆற்றின் பாலத்திற்கு அருகே வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, இறந்தவர் 38 வயதுடைய, டொம்பேயைச் சேர்ந்தவர் ஆவார்.

பாலத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து கடுவெல காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டை மூலம் கிடைத்த தகவல்கள்

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, ​​அவரது தேசிய அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டு மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. கடுவெல பதில் நீதிபதியால் நீதித்துறை விசாரணை நடத்தப்பட்டது.

களனி ஆற்றில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு | Body Floating In The Kelani River Is Found

நுவகொட சோகோ காவல்துறை குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments