ரஷ்யா உக்ரைனின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு நகரமான ஜப்போரிஷியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக குறித்த பிராந்தியத்தின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதும், ஒரு குடியிருப்புப் பகுதியின் சில பகுதிகள் இடிபாடுகளாகக் காட்சியளிப்பதும் காணக் கூடியதாக உள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்

இதேவேளை, ரஷ்யாவின் தொடர் இலக்காக இருந்து வரும் வடகிழக்கு எல்லைப் பகுதியான கார்கிவில், ஸ்மீவ் நகரின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் சினியூபோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள் | Four Killed In Russian Attacks In Ukraine

Advertisement

மேலும், வடக்கே உள்ள மற்றொரு பகுதியில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை ஒருங்கிணைக்க முயன்றபோது, கார்கிவ் பிராந்தியத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments