எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலுக்கும் ஈரான் உடனடியாக சக்திவாய்ந்த பதிலடியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

அத்துடன், தனது நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே நீண்டகால ஒப்பந்தத்திற்கான பாதையை வகுக்கும் நோக்கில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மிகவும் தெளிவாகவும் பகிரங்கமாகவும் உள்ளன என்று அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

மரண பட்டியலில் மொஜ்தபா

இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், டெல் அவிவில் உள்ள தனது கூட்டாளிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அவர்கள் பேச்சைக் கேட்காவிட்டால் ஈரான் அவர்களுக்குப் பாடம் புகட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Iran Vows Powerful Response To Any Israeli Attack

Advertisement

மேலும், தங்கள் மக்களுக்கும் தலைமைக்கும் எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடி பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மரணத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ளார் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்ததைத் தொடர்ந்தே அராக்சி இந்த விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments